குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, July 21, 2008

69.அணுசக்தி ஒப்பந்தம்-மேலும் சில பார்வைகள்

அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய ஞாநியின் கட்டுரையை மேற்காட்டி இட்டிருந்த் சென்ற பதிவில் நண்பர் லஷ்மி நரசிம்மனும்,தோழி கயல்விழியும் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்கள்.
அவற்றில் முக்கியமானவை:
1.அமெரிக்கா இந்தியாவுக்கு ஒரு வெற்றுக் காசோலை தரும் என்ற நினைப்பு வேண்டாம்.
2.அமெரிக்கா என்றால் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ன விதமான மூடத்தனம்?



இந்த ஒருவார காலகட்டத்தில் வேறுசில நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.
அவை,ஞாநியின் இரண்டாவது கட்டுரை,இரண்டாவது பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் அத்வானியின் தி ஹிந்துவின் நேர்காணல்,முந்தாய்ப்பாக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மாணமும் இன்று பிரதமர் மன்மோகனால் முன் மொழியப்பட்டுவிட்டது.


இனி அரசின் தலைவிதி எப்படியானாலும் ஒப்பந்தத்தின் நிலை என்னவாகும் என்பது விவாதத்துக்குரிய ஒன்று.


ஒருவேளை காங்கிரஸ் அரசு கவிழ்ந்து,பாஜக அரசு வந்தாலும் கூட இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றே கருத்து நிலவுகிறது.


எனில் இப்போது என்ன பிரச்னை?ஏன் எல்லோரும் எதிரக்கிறார்கள்?

இந்த ஒப்பந்தம் அணுசக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கானது அல்ல;அப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு ஆகும் செலவும் மிகவும் அதிகம்.

எனவே அரசின் நோக்கம் அதுவல்ல என்பது ஒரு வாதம்.


யுரேனியம் கிடைப்பது குறைந்து வரும் இந்த நேரத்தில் அணு ஆயுத ஆராய்ச்சிக்கு யுரேனியத்தாது தடையின்றி கிடைக்கவேண்டும்.
இதனால் இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டும் அரசு,சில குறிப்பிடப்பட்ட அணு உலைகளை அமெரிக்கா,உலக அணுசக்தி சம்மேளனத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி விட்டு,அவற்றில் நல்ல பிள்ளையாய் மின் உற்பத்தி மட்டுமேசெய்து கொண்டு,மற்ற அணு உலைகளில் அணு ஆயுத ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம் என்பது ஒரு நோக்கம்.


இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள் அல்லது சாதக அம்சங்கள்:


- அரசுக்கு யுரேனிய சப்ளை தடையின்றி நிகழ்கிறது
-மின் உற்பத்தியில் பெரிதும் ஏதும் வளர்ச்சி வந்துவிடப் போவதில்லை;ஆனால் ஒப்பந்தன் கையெழுத்தாகி விட்டால் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரமிருக்காது.
-அணு ஆயுதத் தயாரிப்பு/ஆய்வுக்கு எந்த தடங்கலும் வராது.அதனாலேயே கலாம் கூட இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டியது எனச் சொல்லியிருக்கலாம்.
-இந்த அணுகுமுறைக்கு வலு சேர்க்கும் விதயம்,இந்த ஒப்பந்தத்தை செயலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாராயணன்.இவர் மின்சாரத்துறைக்கோ,நாடாளுமன்ற விவகாரத்துக்கோ பொறுப்பு வகிப்பவர் அல்லர்,ஆனால் பாதுகாப்புத்துறையின் செயலாளர்.


சரி,அப்படியெனில் இந்தியாதானே இந்த ஒப்பந்தத்துக்கு பாடுபட வேண்டும்,ஏன் புஷ் நிர்வாகமும் இதில் ஆர்வம் காட்டுகிறது?

இதற்கு இரு கூறுகள் இருக்கின்றன.
-தனிப்பட்ட அளவில் மன்மோகனை மிக மரியாதையாக நடத்தி உச்சி குளிர வைத்திருக்கும் புஷ் நிர்வாகம்;இதனால் அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை,இதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற அளவுக்கு சென்றிருக்கும் மன்மோகன்.
-அமெரிக்கா ,அவர்களது சொந்தத் தேவைக்கு அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் முயற்சிகளை,அதன் பாதக அம்சங்களைக் கைவிட்டு மிக நீண்ட நாட்களாகிவிட்டது;இப்போது அவற்றின் மின் உற்பத்திகான அணூலை ரியாக்டர்கள் குறைந்தது 10 ஆண்டுகால பழமையான தொடில்நுட்பம் கொண்டவை.இந்த பழம் பொருட்களுக்கு இந்தியா நல்ல விலை கொடுக்கக் காத்திருக்கிறது;என்ன,அதோடு யுரேனிய சப்ளையும் நடக்க வேண்டும்.அதில் ஏதேனும் விவகாரம் வந்தால் ஹைடு ஆக்டின் படி சட்டையைப் பிடிக்கலாம் என்பது அவர்கள் இதைப் பார்க்கும் விதம்.(இந்த இடத்தில் சீனா இந்த தொழில் நுட்பத்தை அமெரிக்கர்களிடமிருந்து நீண்ட காலத்துக்கு முன்பே வாங்கி விட்டதும் கவனிக்கத்தக்கது.)


எதிர்க்கட்சியான பாஜக’வும் இதையே சுட்டுகிறது.

யுரேனிய சப்ளைக்கு(அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையாக இருப்பதால்) நமக்கு வேறு நாதி இல்லை;அதை அமெரிக்கா கொடுக்க முன்வருகிறது-provided- நாம் அவர்களின் அரதப் பழசான அணு மின்சக்தி டெக்னாலஜிக்கும் நல்ல விலை கொடுக்க முன்வரும் பட்சத்தில் !

அணுசக்தி ஒப்பந்தத்தின் கூறுகள் 123 ஒப்பந்தம் என்ற பெயரிலேயே இருக்கின்றன;இவற்றின் ஷரத்துகள் தெளிவாக இருப்பதாகத் தெரியவில்லை;
இவை 2006 இறுதியில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டன.

ஆனால் இதற்குப் பின் அமெரிக்க நாட்டில் நிறைவேற்றப்பட்ட ஹைட் சட்டம்,123 ஒப்பந்தக் கூறுகளில் அச்சட்ட விதிகளோடு மாறுபாடு வரும் போது ஹைட் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை வரையறுக்கிறது.


அத்வானி இந்த விதயத்தை சிறிது ராஜதந்திர மொழியில் கூறியிருக்கிறார்.அவர் கூறியது:

We were against it but we reiterate that our opposition to this deal has been different from that of the Communist parties. The Communist parties feel — they may not have spelt it out that way, but I found an article in your newspaper that is quite clear on that — that we are accepting their [the United States’s] supremacy over us by becoming part of their strategic alliance. It’s not merely the 123 agreement by itself. We are opposed to the 123 agreement because it is also preceded by the Hyde Act. We do not agree with the government’s stand that ‘the Hyde Act has nothing to do with us, we are governed only by the 123 agreement.’ Whenever they have made a statement of this kind, it has been immediately rebutted by the American spokesman.
Therefore, our objection has been not to the strategic relationship, which 123 may involve. Our objection has been to the Hyde Act, which imposes a constraint on our strategic options in the nuclear field. Furthermore, I would say, it was during our period, when we were in government — we did not start the nuclear deal, as is often said — but we did start the process of strategic relationship. I for one — it was not my Ministry at all — but I said several times that India and the USA are the two major democracies of the world — one the strongest, the other the largest. It would be in the interest of the world, of these two countries themselves, if there is a relationship beyond merely friendship. If you call it a ‘strategic relationship,’ it is fine. It should be there.



So we are not against any strategic relationship with the USA. In fact, I would feel that the Communist parties, after all that has happened, also should be able to get out of that mindset. After all, during that entire period of the Cold War, we also were never very favourable to the USA. Because at that time, their relationship was entirely with Pakistan. They were hostile to us. In a way, it is America which has made even the Congress government change Pandit Nehru’s approach of utilising nuclear energy only for peaceful purposes. That was a consistent policy followed by India not only when it was under the Congress regime of Pandit Nehru but even when it came to Morarji Desai, in whose government we also were there. (Vajpayee was there, I was there.) Before going to the U.N. once, when he was to make a speech about nuclear weapons, he categorically said, ‘India will never go in for nuclear weapons.’ Categorical. He read it out to us deliberately, because he knew ours was the only party in the country which had been advocating that course of action.


So it was America which during the Indo-Pakistan war of 1971 sent its nuclear fleet here. It was this which prompted Indira Gandhi to go in for Pokhran-I in ’74. She did Pokhran-I in ’74; we completed the process in ’98. In between, efforts were made but somehow they were not completed. Preparations were made but they were not executed. I don’t want to go into all that. Once [former President R.] Venkataraman, in a book release function, publicly complimented Vajyapee-ji for what he had done, saying ‘When I was Defence Minister, this was planned but somehow we could not go forward with it. I compliment you for completing it.’
I am referring to all this because there is that basic difference between what happened in our time [and the rest]. And yet our relations with America — yes, they imposed sanctions on us. I cannot forget that Pokhran-II was criticised not only by the Leftists but even by Dr. Manmohan Singh in the Rajya Sabha. He severely criticised us. ‘Why have you done it?’ There was a very sharp exchange between my colleague K.R. Malkani, Editor of The Organiser, who was a BJP member of the Rajya Sabha, and Manmohan Singh. He said he did not buy the argument that the economic sanctions would not hurt India, ‘You do not understand what will happen to the country’s economy by what you have done!’ Malkani said, ‘Nothing will happen. You wait and watch.’ Actually nothing happened. One by one, all those restrictions were lifted. In fact, today some of those restrictions imposed after ’74 may be continuing but not those imposed after ’98.
Basically I feel, for a long time America has been wanting to make every non-nuclear country part of the non-proliferation regime, by having them sign the NPT. Even Pandit Nehru or Morarji Desai, who were not in favour of making India a nuclear weapon state, said: ‘We are not going to sign any Treaty which binds us now.’



Our complaint about this [deal] is that in the name of energy autonomy, you are surrendering our strategic autonomy. This is what we oppose.

-With acknowledgements to The Hindu.

ஆக பாஜக வந்தாலும் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை இழக்க மாட்டார்கள்;ஆனால் வேறு வடிவம் தர முயற்சிப்பார்கள் எனத் தோன்றுகிறது.


ஆனால் ஆளும் காங்கிரஸ்(இந்தியத்) தரப்பில்,நாம் 123 ஒப்பந்தத்துக்கே ஒப்புக்கொள்கிறோம்;ஹைட் சட்ட விதிகளுக்கும் இதற்கும் மாறுபாடு வந்தால் அது அமெரிக்கர்களின் பாடு என்கிறது.இது எந்த அளவுக்குச் சரியானது என்பதில் சிறிது குழப்பம் இருக்கிறது.

இந்த குழப்பத்தைத் தெளிவான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் தீர்க்க மன்மோகனோ,காங்கிரஸோ முன்வரவில்லை என்பதும் ஒரு புதிர்.

எனவே அமெரிக்கா என்பதால் கண்மூடித்தனமான எதிர்ப்பு இல்லை;ஒரு வேளை கம்யூனிஸ்ட் அன்பர்கள் இதைச் செய்யலாம்.மற்றவர்கள் இந்தியாவுக்கான பொறிகள்-catch- 123 ஒப்பந்தத்தில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைத் தெளிவு படுத்த வேண்டுகிறார்கள் என்பதுதான் விதயம் !



Tuesday, July 15, 2008

68.அணு சக்தி ஒப்பந்தம்-சில கேள்விகள்

பெரும்பாலும் ஒட்டு வெட்டுப் பதிவுகள் போடுவதைத் தவிர்க்க நினைப்பவன் நான்.

ஆனால் தற்போது அமளிதுமளிப்படும் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய இந்த ஞாநியின் கட்டுரை உளம் பதைக்க வைத்தது உண்மை-அவர் சொல்லும் செய்திகள் உண்மையாயிருக்கும் பட்சத்தில் !

இப்போது ஞாநி-

கொள்கைக்காக தன் ஆட்சியை, தன் கட்சியைக் கூட தியாகம் செய்யத் தயாராகிவிட்டார் மன்மோகன்சிங். தன் கொள்கையோடு ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள உதவுமானால் திரை மறைவு பேர அரசியலுக்கும் அவர் தயார்.இதுதான் மிடில் க்ளாஸின் மிஸ்டர் க்ளீன் மன்மோகன்சிங்கின் அசல் முகம். அப்படி என்ன கொள்கை அது ?

புஷ்ஷுக்கு அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியாக வேண்டுமாம். இதில் அவருக்கு இப்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பிளேய்ருடன் போட்டி. இருவரில் யார் புஷ்ஷுக்கு அதிக விஸ்வாசம் காட்டியவர்கள் என்று பட்டி மன்றமே நடத்தலாம். பிளேய்ருக்கும் சரி, மன்மோகனுக்கும் சரி, தங்கள் தேச மக்களை விட புஷ்தான் முக்கியமானவர்.மன்மோகனின் புஷ் அப்செஷன் பற்றி உளவியல் நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும்.

சென்ற வருடம் மன்மோகன் உதிர்த்த முத்துக்கள் இவை: ``அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சுலபமானது. நாம் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொள்வார். என்னிடம் அன்பாக இருக்கிறார். இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே இவர்தான் இந்தியாவிடம் மிகவும் சிநேகமாக இருப்பவர். உலகத்தின் ஒரே ஒரு சூப்பர் பவராக அமெரிக்கா ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை எந்த இந்திய அரசுக்கும் தன் அமெரிக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் தைரியம் இருக்கவில்லை. நாங்கள் மாற்றி வருகிறோம்.''

இதற்கு முன் கொள்கைக்காக தன் ஆட்சியை தியாகம் செய்த பிரதமர் என்று யாரையாவது சொல்வதானால் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியதால் ஆட்சியைத் தியாகம் செய்த வி.பி.சிங்கைத்தான் நியாயப்படி குறிப்பிடலாம். அவரோடு ஒப்பிடும்போது மன்மோகன் சிங் எனக்கு ஒரு அற்பப் புழுவாகத் தெரிகிறார்.

ஏனென்றால் இப்போதைய மன்மோகனின் கொள்கைப் பிடிப்பு அவரை பிரதமராக வைத்திருக்கும் நாட்டு நலன் சார்ந்தது அல்ல. வி.பி.சிங்கின் கொள்கையோ சமூக நீதிக்கானது.

அணு ஒப்பந்தத்தில் காட்டும் பிடிவாதத்தில் கால் சதவிகிதத்தைக் கூட அவர் பணவீக்கத்தினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுப் பிரச்னையில் காட்டி, கடும் நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அது புஷ்ஷுடைய பிரச்னை அல்ல.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அதனால் இந்தியாவுக்கு லாபம் என்ற வாதங்கள் முற்றிலும் பொய்யானவை.

அணுகுண்டு தயாரிப்பது, சோதனையாக அதை வெடித்துப் பார்ப்பது என்ற முட்டாள்தனத்தை இரு முறை இந்தியா செய்ததன் விளைவாக இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வேலையில் அமெரிக்கா தலைமையிலான அணுகுண்டு நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.அதன் இன்னொரு அத்தியாயம்தான் இந்த அமெரிக்க அணு ஒப்பந்தம்.

இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஐ.நா. சபை, சர்வதேச அணுசக்தி ஏஜன்சி முதலியவை வசம்தான் இருக்கும் என்று டெக்னிக்கலாக சொல்லப்பட்டாலும், இன்று இந்த அமைப்புகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாகவே இயங்கி வருபவை என்பது நடைமுறை உண்மை.

இல்லாத ஆயுதங்களை அழிப்பதற்காக இராக்கில் புஷ் நடத்திய யுத்தம் முழுக்க முழுக்க ஐ.நா. சம்மதத்துடன் நடத்தப்பட்டது சமீப வரலாறு.இந்தியாவை தன் ஜால்ரா/அடியாள் கோஷ்டி வளையத்துக்குள் எப்படியாவது சாம தான பேத தண்ட முறைகளைப் பயன்படுத்தி கொண்டு வருவதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சிகள் அமெரிக்காவுக்கு அவசியமானவை. இந்த வட்டாரத்தில் சீனாவை சமாளிக்க இந்தியாவை அது பயன்படுத்த விரும்புகிறது.

ஆனால் இதில் நமக்கென்ன லாபம்?

சீனாவுடன் நமது பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டு நண்பராகக் கைகோர்த்துக் கொள்வதுதான் தொலைநோக்கில் நமக்கு லாபம். மக்கள் சக்தியிலும், நிலப்பரப்பிலும், உழைப்பிலும், ஆற்றலிலும் பெரிய நாடுகள் நாம். மரபான தத்துவப் பார்வையினாலும் ஓரணியில் இருக்கவேண்டிய இரு பெரும் நாடுகள் நாம். நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் மேற்கத்திய நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. இப்போதும் அதேதான்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தைப் போட்டேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன் தரப்பில் இதற்குக் கூறும் நியாயங்கள்தான் என்ன? மண்டையைப் பிளக்கும் ஷரத்துகள், வாதங்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூட்டிக் கழித்துக் கடைசியில் பார்த்தால் ஒரே ஒரு வாதம்தான் எஞ்சுகிறது.

நமக்கு நிறைய மின்சாரம் தேவை.

அதற்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தை விட்டால் வேறு வழி கிடையாது. அதையும் யுரேனியத்தையும் நமக்கு அள்ளி அள்ளித்தர அமெரிக்காவும் மேலை நாடுகளும் சம்மதிக்க வேண்டுமானால்,இந்த ஒப்பந்தத்தைச் செய்தே ஆக வேண்டும். இவ்வளவுதான் விஷயம்.

இது எல்லாம் பொய் என்று போன வருடமே `ஓ' பக்கங்களில் சொல்லியிருக்கிறேன். இப்போது மன்மோகனின் பிடிவாதத்தால் அவர் தன் பதவியை, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை எல்லாம் தியாகம் செய்து அத்வானியை பிரதமர் ஆக்கும் ஆபத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதால், மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகாவாட். இதில், நிலக்கரி மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். அணைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை போன்ற சூழல் மாசாகாத தூய வழிகளில் பெறுவது சுமார் 5 சதவிகிதம். அணு உலைகள் மூலம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே! அடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான். (இவை எல்லாமே அரசின் புள்ளிவிவரங்கள்தான்.)

இங்கே, யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பதே தவறு. அடுத்த 40 ஆண்டுகளில் அணு மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் (சுமார் 2,228 குண்டுகள்!) தேவைப்படும் யுரேனியம் அளவு சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன். நம்மிடம் இருப்பதோ 78 ஆயிரம் டன்கள். இதை வெளியில் எடுத்து பதப்படுத்திப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மக்கள் ஆதரவுடன் நில ஆர்ஜிதம் மட்டும்தான்!

யுரேனியத்தைவிட அதிகமாக நம்மிடம் தோரியம் இருக்கிறது. உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடி நம்மிடம்தான் தோரியம் உள்ளது. சுமார் 3 லட்சம் டன்கள். இதைக் கொண்டு 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவிலேயே உருவாக்கியாயிற்று. இதை அடுத்த 40 வருடங்களில் முழுமையாகச் செயல்படுத்துவதுதான் நமது அணுசக்தித் துறை வைத்திருந்த திட்டம்.

அதை சீர்குலைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழில்நுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன.

இப்போதுள்ள அணுசக்தி திட்டப்படி, இன்னும் 25 வருடங்களில் 90 ஆயிரம் கோடி செலவிட்டாலும், நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின்சாரத் தேவையில் 9 சதவிகிதத்தை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால், அணு உலை நிர்மாணிக்கும் செலவுதான் அதிகரிக்கும். இப்போது 7 கோடி ரூபாயில் நிர்மாணிக்கும் உலையை நிறுவ 9 கோடி செலவாகும். அணு உலையில் தயாரிக்கும் மின்சாரத்தின் அடக்க விலை வேறு எந்த வழியில் தயரிக்கும் மின்சாரத்தை விட இப்போதும் அதிகம்தான். எப்போதும் அதிகம்தான்.

நமது மின்சாரத் தேவைகளுக்கு, சூழலைக் கெடுக்காத மாற்று வழிகளைத் தான் நாம் அதிகரிக்க வேண்டும். அணு உலைகளுக்கு ஒதுக்கும் தொகையை மாற்றி, இவற்றுக்குத்தான் ஒதுக்க வேண்டும்.

உலகத்திலேயே காற்றுவழி மின் உற்பத்திக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், நாம் முன்னணியில் இருக்கிறோம். உலகிலேயே நான்காவது இடம். வட கிழக்கு மாநிலத்தில், புனல் மின்சாரத்துக்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 24 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கலாம். ஆந்திராவில் இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக சின்னச் சின்ன காற்றாலைகள், சூரிய சக்தி ஆலைகள், வேலிக் காத்தான், உடை மரங்களை எரி வாயுவாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிற்றாலைகள் முதலியவற்றை கிராமங்கள் தோறும் நிறுவி அந்தந்த கிராமத்தின் மின் தேவையை சந்திக்கும் திட்டங்கள்தான் நமக்குத் தேவை.

அதிகாரத்தைப் போல மின்சார தயாரிப்பும் டீசென்ட்ரலைசேஷனுக்கு உட்படுத்தப்படவேண்டும்.நம்முடைய இந்தப் பலத்தை எல்லாம் அதிகரிக்காமல், அணுசக்தி பக்கம் பணத்தைத் திருப்புவதும் சரி, அதன் பேரால் அமெரிக்காவின் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதும் சரி, நிச்சயம் புத்திசாலித்தனமானதே அல்ல.ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக முலாயம் சிங், அமர்சிங் காலில் சோனியா காந்தியை மன்மோகன் சிங் தள்ளியிருக்கிறார். ஒப்பந்தம் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்ல மன்மோகனின் செக்யூரிட்டி ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்களை சந்தித்து விளக்கினாராம். கனவுத் தாத்தா கலாமை வேறு முலாயமும் அமரும் சந்தித்து கருத்து கேட்டார்களாம். `பேஷ், பேஷ். ஒப்பந்தம் நன்னா இருக்கு` என்று அவரும் சொன்னாராம்.

இவையெல்லாம் திரை மறைவு அரசியல் பேரங்களை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகங்கள்தான்.

அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கும் மன்மோகன் வகையறாக்கள், ஏன் எதிர்ப்பவர்கள் கூட, கீழ்வரும் ஐந்து கேள்விகளுக்கு நியாயமான பதில்களைச் சொல்ல வேண்டும்.

1. ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் தன் நாடாளுமன்றத்தில் விவாதித்து அங்கு ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்பந்த வடிவத்தைத் தருகிறது. ஏன் இந்தியப் பிரதமர் மட்டும் இதே போல இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்றபின்னர்தான் அமெரிக்க அரசிடம் செல்வது என்ற நடைமுறையை மறுக்கிறார்?

2. இந்தியா கையெழுத்திட்டபிறகும் ஹைட் சட்டத்துக்கு அந்த ஒப்பந்தம் பொருந்தி வருகிறதா என்பதை மறுபடியும் அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்ற விதியை அமெரிக்கா வைத்திருக்கிறது. இதே போன்ற சம உரிமையை இந்திய நாடாளுமன்றத்துக்கும் தரவேண்டும் என்ற விதியை ஏன் மன்மோகன் அமெரிக்காவிடம் வற்புறுத்தவில்லை?

3.இந்தியா அமெரிக்க உதவியில்லாமல் தயாரிக்கும் அணு மின்சாரத்தை விட, அமெரிக்க உதவியுடன் தயாரித்தால், செலவு அதிகரிக்கும் என்பது சரியா? தவறா?

4. எப்படித் தயாரித்தாலும், இன்னும் 30 வருடங்கள் ஆனாலும் அணு மின்சாரம் நம் மொத்தத் தேவையில் பத்து சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யாது என்பது உண்மையா, இல்லையா?

5. அணுக் கழிவுகளை என்ன செய்வது என்பது இதர நாடுகளைப் போலவே இந்தியாவுக்கும் இன்னமும் பிரச்னைதான் என்பது உண்மையா, இல்லையா?

இப்போது மீண்டும் நான்:

சிறிது நாட்களுக்கு முன் ஐரோப்பிய நாட்டின் புகழ்பெற்ற காற்றாலை நிறுவனங்களுள் ஒன்றான வெஸ்டாஸ் என்னும் நிறுவன ஆசிய பசிபிக் ஒன்றிய நிதி மேலாளரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது;அவருடன் பேசும்போது காற்றாலை மூலம் சக்தி உறபத்தி,ஒரு மாற்று வாய்ப்பாக வேகமாக வளர்ந்து வருவதாகவும்,பெருகி வரும் எண்ணெய் தட்டுப்பாட்டில் மாற்று வழி சக்திக்கான தேவைகள் துரித வளர் துறைகளாக இருக்கும் எனவும்,அவரின் நிறுவனமே வேகமாக வளரும் நிறுவனங்களில் ஒன்று எனவும் கூறினார் !

இந்த நியாயமான சந்தேகங்களை,கேள்விகளை எழுப்பும் தார்மீக உள்ள நேர்மை கொண்ட அரசியல்வாதி ஒருவர் கூடவா நாட்டில் இல்லை?

எனில் நாம் அதளபாதாள சரிவை நோக்கி தலைதெறிக்கும் வேகத்தில் ஒடிக் கொண்டிருக்கிறோம் !!!

பி.கு: இந்த செய்திகளை விளித்து உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு மின் மனு,பொதுநல விதயமாகக் கருத வேண்டி,அனுப்ப உத்தேசம்;விருப்பமிருப்பவர்கள் கை கோர்க்கலாம் !!!

Monday, July 14, 2008

67.தமிழும்,சிவமும்...இன்ன பிறவும்-II


இந்த பதிவு இதே தலைப்பில் எழுதப்பட்டதன் தொடர்ச்சி.
சிவம் என்னும் தத்துவத் தோற்றுவாய்
பழந்தமிழர் வாழ்வில் லிங்க வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு தனியான சான்றுகள் தேவையில்லை;இன்னும் சொல்லப்போனால் ஆப்பிரிக்கா,சீனம்,ஆஸ்திரேலியாவின் அகழ்வுகளின் போதும்,சிந்து,மொஹஞ்சதாரோ அகழ்வுகளின் போதும் லிங்க வடிவம் மற்றும் யோக வடிவங்களும் (அகழ்வுப்பொருள் எண் 420)கிடைத்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதும் காணக்கிடைப்பதே.இந்த யோகிகளின் வடிவம் யோகிகளின் தலைவனாக பழந்தமிழ் நாட்டில் அறியப்படும் சிவனின் வடிவமே என கற்கால இந்திய ஆய்வில் ஈடுபட்ட ஸ்டெல்லா க்ராம்ரிஷ் என்ற பெண்மணியின் நூற்கருத்துக்கள் சொல்வதும் சிந்திக்க வேண்டுவது.

எனில் சிவத்துக்கான தோற்றுவாய்க் காலம் என்ன?
தொல்காப்பிய மொழி விதிகள் சகர மெய்யோடு இகரமும்(ச்+இ) சேர்ந்து சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடாது எனச் சொல்லவில்லை.
இரண்டாவதாக அகத்தியரின் மாணாக்கர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் கழாரம்பர்

தமிழ்,சிவம் இனிமை என்னும் தனிப் பொருளாம்

எனச் சொல்லும் கூற்று,தமிழ் என்ற சொல்லுக்கே,சிவம்,இனிமை என இரு பொருள் இருக்க வாய்ப்பிருப்பதைக் குறிக்கிறது.விளக்கத் தேவையின்றி இது தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட அல்லது தொல்காப்பிய காலமே.
இன்னோரு தொல்காப்பிய பாயிரக் குறிப்பு நாவலந்தேயத்தை
செந்தமிழ் இயற்கை சிவனிய நிலம்

எனக் குறிப்பிடுகிறது.
லிங்கம் என்ற சொல்லுக்கு குறியீடு என்று பொருள்;சிவலிங்கம் என்பது சிவம் என்னும் தத்துவத்தை குறிக்கும் குறியீடு (குறி அல்ல) எனப் பொருள்படும்.
பண்டைத்தமிழர் கடவுட்கொள்கை சிவம் என்னும் தத்துவத்திற்கு பால்வேறுபாடு கூட(gender) குறிப்பிடவில்லை.திருமந்திரம் சதாசிவம் என்றே குறிக்கிறது.சிவம் என்னும் தத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய,அனைத்தினுக்கும் புறத்துமாயிருக்கிற ஒரு தத்துவமாகவே தமிழர் கடவுட் கொள்கை அறிவுறுத்துகிறது.
திருமந்திரத்தின் காலம்
இன்னும் வட்டெழுத்துக்காலத் தமிழ் மொழி 16 உயிரும் 35 மெய்யும் ஆக 51 எழுத்துக்களைக் கொண்டது என்பது மொழியியல் ஆய்வறிஞர்களின் துணிபு.
இந்த வட்டெழுத்துக் காலம் தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்டது.
திருமந்திரத்தில் திருமூலர்
ஆறிருபத்து நாலஞ்செழுத் தஞ்சையும்
வேறுருவாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே
என்கிறார்.
இது 35 விளைந்து கிடக்கும் மெய்யெழுத்துகளுள்(ஆறு+இருபத்து நான்கு+ஐந்து) மலம்(அறியாமை) நீக்கும் சிவாயநம என்ற சொல்லைத் தேறிக் கூறுமின் கூறக்கூடிய குறைகள் ஏதும் இருக்காது எனச் சொல்வது திருமந்திரத்தின் காலம் பற்றிய சர்ச்சைகளுக்கு முடிவு கூறுவது.
எனவே தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்ட நூலாகவே திருமந்திரம் இருந்திருக்க வேண்டும் என்பதும்,அக்காலத்திலேயே சிவ வழிபாடு இருந்தது என்பதும் தெளிவு.
மேற்குறிப்பிட்ட இரு விளக்கங்கள் தொல்காப்பிய காலத்துக்கு முன்னரே சிவம் என்னும் தத்துவம் மற்றும் லிங்க வழிபாடு தமிழகத்தில்,தென்னாட்டில் இருந்தது என்பதற்கும்,ஏதோ காரணம் பற்றி தொல்காப்பியத்திற்கு முன்னைய அருந்தமிழ் தத்துவ நூல்கள் கிடைக்கப்பெறவில்லை(இக்காரணம் பின்னர் ஆராயப்படும்) என்பதும் அறியப்படும்.
ஆரியர் வருகை:
1.ஆரியர்கள் என்று வரலாற்றால் குறிக்கப்படுபவர்கள் இன்றைய ஈரானிய நிலப்பகுதிகளில் இருந்து இந்தியப்பகுதிகளுக்குள் நுழைந்தவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.
2.இவர்கள் நாவலந்தேயத்தில் வாழ்ந்த மக்களுடன் ஒப்பிடும்போது அதிக உயரமாகவும்,வெம்மை கலந்த சிவந்த நிறம் கொண்டவர்களாகவும்,ஆடல்,பாடல் திறன் மிக்கவர்களாகவும் விளங்கியவர்கள்.
3.இவர்கள் வந்த காலம் தென்பகுதியைக் கடல் கொண்ட காலமாகவே இருக்க முடியும்;இந்த கடல் கோள் தென்பகுதி நிலத்தைப் நீரால் பிறித்தும் வடபகுதி நிலத்தை நிலத்தால் இணைத்ததுமான மாறுதல்களைச் செய்திருக்க வேண்டும்,எனவேதான் இந்தியப் பகுதிகளுக்குள் நுழைய மத்தியக் கீழ் நாட்டு நிலப்பகுதியிலிருந்து நிலப் பாதை இந்த இயற்கை மாறுபாடுகளால் நேர்ந்திருக்க வேண்டும்.
4.இவர்கள் வந்த காலத்தில் நாவலந்தேயம் பரவலாக தமிழ் பேசும் தமிழர்களால் நிறைந்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது.
5.இவர்களது தோற்றப் பொலிவாலும்,ஆடல் பாடல் திறனாலும் கவரப்பட்ட நாவலந்தேய மன்னர்கள் இவர்களுக்கு பல சலுகைகளை செய்யத் தலைப்பட்டார்கள்.
6.இவர்களின் வழிபாடு முறை தீ வேள்வி வளர்த்து அதில் மிருகங்கள் பலி கொடுத்து அக்னியையும்,இந்திரனையும் வழிபடும் முறையே.ருத்ரன் என்னும் ஒரு உருவகத்தை அழிவின் தேவதையாக குறிப்பிட்ட இவர்கள் அந்த உருவகம் சிவந்த நிறமுடைய,கோபாவேசத்துடன் கூடிய அழிவின் நாயகன் என்ற குறிப்பை முன்வைத்தனர்.இது வழிவழியாக நாவலந்தேயத்திலேயே சிறப்புற வாழ்ந்த மக்களின் வழிபாட்டும் முறையை விட தங்கள் வேள்வி வழிபாடு உயர்ந்தது,சிறந்தது என்ற தன்னை மேற்படுத்திக்கொள்ளும் செயலால்,இந்த ருத்ரன் என்னும் அழிவு வடிவத்தை,அன்பால் குறிப்பிடப்படும்,அன்பின் வடிவாகவே அறியப்பட்ட சிவத்தின் மீது ஏற்றினர்.
இந்த வேறுபாடு கொலை வேள்வி வழிபாட்டு முறைகளை அன்பின் வழி வாழ்வு முறை கொண்ட தமிழர்கள் ஏற்காததாலேயே ஆரியர்கள் சிவம் என்னும் தத்துவத்தையும்,அத்தத்துவம் கொண்டிருக்கும் ஆழ்ந்த தத்துவப் புதையல்களையும் அழித்தொழிக்கும் முறைகளை,மன்னர்களிடம் ஏற்படுத்திக் கொண்ட செல்வாக்கின் மூலம் செயற்படுத்தத் தலைப்பட்டனர்.
இந்த செயல்கள் ரிக் வேதத்தின்(வடமொழியின் முதல் நூல் ரிக் என்பதை அறிக..ரிக் தொடர்ந்த எல்லா வடமொழி நூல்களும் ஆரியர்கள் நாவலந்தேயத்திற்குள் நுழைந்த பிறகே ஆக்கப்பட்டன;வாழ்வு தேடி இடம் பெயரும் ஒரு இனத்தவராக வந்த அவர்களுடன் எந்த தத்துவ சாரங்களும் அற நூல்களும் உடன்வர வில்லை;அவை(ரிக்,யஜுர்,சாம,அதர்வண) கூறும் செய்திகளை-contents- வைத்தே இந்தக் கூற்றுகளை அறியலாம்.) 2’ம் மண்டலம் 20ம் பண்ணில் சொல்லப்பட்டுள்ள 6 மற்றும் 7ம் பாடல்களில் உள்ளன.அவை சொல்வதாவது:
‘அரிய காரியங்களை முடிப்பவனும்,மிகப்புகழ் பெற்ற இந்திரன் ஆரியமகனை உயர்த்துகிறான்;வலிமையும் ஆற்றலும் வெற்றியும் உடையோனாய் அருவருக்கப்படும் தாசனை(தமிழர்கள்) தலை கவிழச் செய்கிறான்

மேலும் ரிக் 5ம் மண்டலம் 10ம் பண், 7ம் மண்டலம் 21ம் பண்,96 ஆவது பண்,99ம் மண்டலம் 3ம் பண் ஆகிய பாடல்கள் தமக்கு வலிமை கூடும் பொருட்டு அளவற்ற விலங்குகளைக் கொன்று நிணம்,நெய்,சோமச்சாறு சொரிந்து செய்யப்பட்ட தீ வேள்விகளையும்,தாஸரஞ்சப் போரில்,சுதாஸை எதிர்த்த ஆரியரல்லாத விஷானிகள் சிவாக்கள் என்பவர்களை இந்திரன் துணை கொண்டு வென்றதாகவும் பொருள்படும் குறிப்புகள் கிடைக்கின்றன.
மேலும் சிவ வழிபாடு செய்தவர்கள் சிஸனதேவர்கள் எனவும்,சிவாக்கள் எனவும் இழிவாகக் கூறி கொலை,தீ வேள்வி செய்யாத,அதை ஏற்காத மக்களை,ருத்திரனைப் போற்றாதவர்களை தீயிட்டு அழித்த வரலாறுகளை இவை பேசுகின்றன.இவை ரிக் ‘சிவம் என்ற தத்துவத்தை இழிவாகவே பேசுகிறது என்பதற்கான சான்றுகள்.
ஆரிய/தமிழர்கள் உடன்படிக்கைகள்:
ஆளும் மன்னவர்களிடம் தங்களுக்கிருந்த செல்வாக்கினாலும்,பலத்தாலும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் விந்தியமலைக்குத் தெற்கே துரத்தப்பட்டனர்;அந்தப் பகுதி தெக்கணம் என அழைக்கப்பட்டது;ஆரியவர்த்தம் என்றழைக்கப்படும் ‘இந்துஸ்தானம் என்ற நாட்டுப் பகுதி வரையறுக்கப்பட்டு இதன் தெற்கெல்லையாக விந்திய மலைப்பகுதி வரையறுக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை பற்றிய செய்திகள் ‘போதாயன சூத்திரம் என்னும் வடமொழி நூலின் ஆமத்ஸ்தம்பத்தில் பேசப்படுகின்றன.
ஆயினும் இதன் பின்னரும் இந்த உடன்படிக்கைகள் மீறப்பட்டு பற்பல காலங்களில் தென்னாடு நோக்கி அவர்கள் கூட்டமாக (பிரகச்சரணர்(எல்லோருக்கும் முதலில் வந்தவர்),அஷ்ட சகஸ்ரம்(எண்ணாயிரம் பேர்) நகர்ந்ததும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது.
ருத்ரன்,ருத்ர சிவனான கதை:
ருத்ரன் என்னும் கொடும் தேவதையை ரிக்ல் குறிப்பிட்ட வடமொழி ஆரியர்கள் பின்னர் இயற்றப்பட்ட யஜுர்,சாமம்,அதர்வணத்தில் ருத்ரனுடன் சிவன் என்னும் சொல்லையும் சேர்த்து ருத்ரசிவன் என்றாக்கிக் கொண்டனர்;இது தென்னாட்டில் சிவம் என்னும் தத்துவத்துக்கிருந்த அழித்தொழிக்க முடியாத நன்மதிப்பை தான் வழிபடும் ருத்ரன் என்னும் பிரதிமைக்கு ஏற்றும் ஆரியரது முயற்சியே இந்த ருத்ரன் ருத்ரசிவனான கதை.
இதற்கான சில தரவுகள் பின்வருவன,மஹாதேவ் சக்ரவர்த்தி எழுதிய The Concept of Rudra-Siva through Ages என்ற புத்தகத்திலிருந்து.(ரிக்ன் மண்டல/பண்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
In Rgveda,Rudra is described as fierce^1 and
destructive like a terrible wild beast ^2,swift ^3,the red boar of the sky
^4,the cow-slayer ^5,the man-slayer ^6,the lord of animal sacrifices ^7,the
father of Rudras or Marats ^8 and who bears swift arrows and strong bow
^8.
He is also identified with Agni ^9.
No distinct
cosmical functions are ascribed to him ^10,
He is,
in the vague & uncertain anthropomorphic form, of the dreadful &
destructive powers of nature-of forests, lighting and forest fires
^11.
1- Rig II.33.9
2- Rig II.33.11
3- Rig I-114.4
4- Rig I-114.5
5/6- Rig I-114.10
7- Rig I-43.4
8- Rig I-114,II.33
9- Rig II-33.10
10- Rig VII-46.1
11- TAG Rao,in Elements of Hindu Iconography
இவ்விதமாக ரிக்ல் கீழ் நிலையான பயப்படுத்தும் தேவதையாக உருவகிக்கப்பட்ட ருத்ரன்,வரலாற்று நிலையில் மிகப்பின்னால் உள்ள உபநிடதங்களில்(ப்ரஹதாரண்யக,ஐத்ரேய,சாண்டோக்ய உபநிடதங்கள்) ருத்ர-சிவனாக மாற்றம் பெற்று அனைத்துக் கடவுளர்க்கும் மேலான கடவுளாக,உருவற்ற பிரம்மம் ஆக,வேதங்களை உருவாக்கித்தந்தவனாக ‘உருமாற்றம் அடைகிறான்.
இதற்கான காரணம் எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடியதே.ஒரு பகுதியின் உயர்ந்த சிறந்த ஒரு பொருளை,தத்துவத்தை தமது உடமையாக அறிவிப்பதன் மூலம் அப்பொருளை,தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர் யாமே என்ற மயக்கறிவைத் தோற்றுவிப்பதே நோக்கம் என்பதை யாரும் அறியலாம்.
தமிழர்களின் கடவுட் கொள்கையில் அன்பின் வழியாகி அனைத்தினுக்கும் உள்ளாகவும்-புறமாகவும் உள்ள, லிங்க வடிவில் வழிபடு காலமே அறியப்பட முடியாத அளவு தொண்மையுடைய,ஆரியர்கள் வருகைக்கு பன்னெடுங்காலம் முன்னரே தமிழர் தொழுதேத்திய சிவம் என்னும் தத்துவம்,வடமொழியர்களின் ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேத மற்றும் அதற்குப் பின் வந்த உபநிடத காலத்தாலெயே ஏற்றம் பெற்றது என்பது,குருடர்கள் யானையைத் தடவி விளக்கம் சொல்வதற்கொப்பானது.
டிஸ்கி 1: இதை எழுதுவதற்கான காரணம் பண்டைத் தமிழரின் கடவுட் தத்துவம் எவ்வளவு உயர்ந்தது ,தமிழரின் உயர்ந்த சிந்தனை வளம் எத்தகையது என்பதை இப்போதைய தலைமுறை இளையர்களுக்கும்,இன்றைய பட்டப்படிப்பாளர்களும் அறிய வேண்டும் என்ற காரணம் பற்றியே.இன்றைய பிராமணர்கள் என்றறியப்படும் வகுப்பினரின் மேல் எனக்கு எந்தவித முன்கருத்தோ,துவேஷமோ இல்லை.

டிஸ்கி 2: இன்றைய தமிழகத்தின் 'திராவிட' அரசியலும்,பண்டைத்தமிழரின் அன்பு நெறியும் முற்றிலும் இருவேறு திசையில் இருப்பன.பண்டைய தமிழரிலும் அந்தணர் என்னும் வகுப்போர் இருந்தனர்;அவர்கள் தமிழரின் ஒரு பிரிவினரே;அவர்களுக்கும் வடதிசையிலிருந்து வந்த ஆரியருக்கும்-அவர்கள் வந்தேறிய அக்காலத்தில்-ஏதும் தொடர்பிருக்கமுடியும் எனக் கருதுவதும் முட்டாள்தனமானது.தெய்வப்புலவர் திருவள்ளுவரும் ‘அந்தணர் என்போர் அறவோர்' எனவே குறிக்கிறார்,அந்தணர் என்போர் ஆரியர் என்று அல்ல !
-இன்னும் வரும்

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...