குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, December 25, 2008

87.பச்சை(சிறு) மா மலை போல் மேனி-ப்ரகோலி

கார் வண்ணக் கண்ணனைப் பற்றிய பதிவு அல்ல இது.செவிக்கும் சிந்தைக்கும் உணவாகும் மாலவனைப் பற்றிய சிந்தையும் செய்திகளும் அல்ல !ஆனால் இது வயிற்றுக்கு உணவாகும் பண்டம் பற்றிய ஒரு பதிவு.(சும்மா ஒரு மாறுதலுக்கு !)

ப்ரகோலி என்ற ஒரு காய்-தவறு,காய் அல்ல பூ,இருக்கிறது.இந்தியாவில் பரவலாகத் தெனபடும் ஒரு பூ அல்ல இது.ஆனால் தற்போது ரிலையன்ஸ் ஃபரஷ் போன்ற கடைகளில் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்...


ப்ரகோலி-பார்க்க இப்படித்தான் இருக்கும்...

வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர் இதைப் பார்த்திருக்கலாம்,ஆனால் எத்தனை பேர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று.

நானே சிங்கைக்கு வந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் இதை சுவைக்கத் தொடங்கினேன்.

இந்தக் பூ,பொரியலுக்கான காயாகப் பயன்படுத்த சிறந்த ஒன்று.

பார்ப்பதற்கு அடர் பச்சை நிறக் காலி ஃபளவர் போல் தோற்றமளிக்கும் இது,ஃபோலிக் அமிலம் மிக அதிகம் கொண்டள்ள மிகச் சில காய் வகைகளில் இதுவும் ஒன்று.ஆகையால் கருவுற்ற பெண்களுக்கு இந்தக் காய் அதிகம் பரிந்துரைக்கப் படும்.

இதைப் பயன்படுத்தி பல ரெசிபிகளை நான் முயற்சித்திருக்கிறேன்.சுவையான,எளிதான ஒன்று இங்கே..

ப்ரகோலி பொரியல்

தேவையான பொருள்கள்:

ப்ரகோலி(அஃப் கோர்ஸ்,அதில்தான் கறியே செய்கிறோம்!)-இரண்டு பூக்கள்,பெரிதெனில் ஒன்று
கடுகு,உ.பருப்பு-தாளிக்க
எண்ணெய்
மசாலாத் தூள் அல்லது சாம்பார்ப் பொடி
சிறிது மிளகுத் தூள்

செய்முறை:ப்ரகோலிப் பூவை சிறிது சிறிதாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்,காலி ஃபளவரை பகுப்பது போல் செய்தால் போதும்.பூ நல்லதாக இல்லையெனில் நிறையப் புழுக்கள் இருக்கும்,வெள்ளை நிறத்தில்,எனவே கவனம்.பரவாயில்லை இருந்தால் அது நான்வெஜ் ஐடமாக இருக்கும் என்பவர்களுக்கு வேலை எளிது !

பகுத்தவற்றை ஒரு பீங்கான் அல்லது அவனில்-ovan-உபயோகிக்கத் தகுந்த ஒரு கிண்ணத்தில் வைத்து அவனில் சுமார் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

பின்னர் வாணலியில்-வானொலி அல்ல-இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்த பிறகு வேகவைத்த காயைப் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கிய பின் ஒரு தேக்கரண்டி சாம்பார்பொடி,சுமார் 15 மிளகைப் பொடித்த பொடி இரண்டையும் தூவி தொடர்ந்து வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.


அவ்வளவுதான் ! எளிதான சமையலில் சுவையான,சத்துக்கள் நிரம்பிய ப்ரகோலி பொரியல் தயார்!

சில முக்கிய குறிப்புகள்:1.ப்ரகோலி அதிக ஃபோலிக் அமிலம் மற்றும் சத்துக்கள் நிரம்பியதாக இருப்பினும் மேலிருக்கும் ஆயிரக் கணக்கான சிறு மொட்டுக்கள் போன்ற பகுதியில் அதிக வாயுவைத் தரக்கூடிய பொருள்களும் இருக்கும்;எனவே நுண்ணிய துண்டுகளாக்கப் பட்ட இஞ்சி அல்லது மிளகுத்தூள் கண்டிப்பாக இதனுடன் சேர்க்க வேண்டும்.
2.பூவை வாங்கும் போது அடர் பச்சை நிறத்திலும் எடை குறைவாக காற்றுப் போல இருப்பதையும் பார்த்து எடுக்கவும்;அவைதான் நல்ல பூக்கள் !

Wednesday, December 24, 2008

86.சூடான இடுகைகள்-எனது இரண்டு பைசாக்கள்

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் பற்றி பதிவர்களிடையே நடக்கும் அமளிதுமளிகள் அனைவரும் அறிந்ததே.இதில் நான் நல்லவன் அவன் கெட்டவன் மற்றும் நான் ரொம்ப நல்லவன் அவன் ரொம்பக் கெட்டவன் வகையான பதிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சில பதிவர்கள் அதனால் என்ன,எங்களுக்கு ஒன்னும் ஃபீலிங்ஸ் இல்லை...த்ஸொ...த்ஸொ என்ற வகையிலும் சில பதிவுகள் எழுதினார்கள்.

ஒரு பொது விதியாக சூடான இடுகையில் இடம் பெற வேண்டுமெனில் சில குறிச்சொற்கள் இருந்தால் போதும் என்ற வகையில்தான் சில நாட்களாக நிலைமை இருந்தது.

இது சரி செய்யப் படவேண்டும் எனவும் உண்மையில் சிறந்த வகையில் எழுதப் படும் பதிவுகள் பலரின் பார்வைப் புலம் செல்ல வேண்டும் எனத் தமிழ்மணம் நினைக்கிறது என சில தகவல்களால் அறிகிறேன்.எனவே நடப்பவை நல்லதற்கே எனவும் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வாறு குறிப்பிட்ட குறிச்சொற்கள் போட்டு எழுதி சூடான இடுகைக்கு இடம் பிடிக்கும் உத்தி மறுதலிக்கப் படுவது வருத்தப் பட வேண்டிய ஒரு விதயம்.எனவே சூடான இடுகை எழுத வேறு விதமான வழிகள் சீக்கிரமாக் கண்டறியப்பட வேண்டும்.

இந்த நிலையில் எளிதாக சூடான இடுகைப் பகுதியில் உங்கள் பதிவுகள் செல்ல என்னாலான ஒரு நல்ல ஆலோசனை சொல்லி விலகுகிறேன்.

உங்கள் பதிவை ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதினால் அது உண்மையில் எந்த ஐயமுமின்றி சூடான இடுகையாக இருக்கும்.

எப்படி எழுத வேண்டும் என்று உண்மையில் அறிய விரும்புபவர்கள் மட்டும் பின்வரும் எழுதும் வழிமுறையை அறிந்து பயன்பெறுங்கள்..

கவனிக்கவும்!இது சூடான இடுகைகள் எழுத விரும்புவோர் மட்டும் பார்க்க வேண்டிய குறிப்பு,அனைவருக்கும் பொதுவானதல்ல !!!!

சூடான இடுகையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான குறிப்பு....

Tuesday, December 2, 2008

85.மும்பை தாக்குதல்-பாக்'கின் விஷ(ம)ப் பிரச்சாரம் !

மும்பையில் நடந்த கோரத் தாக்குதல் பற்றய பல பதிவுகள் வந்த விட்டன.அது பற்றிய சில செய்திகளை என்னுடைய சென்ற பதிவில் சொன்னேன்.

இந்த தாக்குதலுக்குப் பின் ஒரு செய்தியாளர் ஒபாமாவிடம் வினவிய கேள்வி:

இந்தியா இந்தத்தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா இரட்டைக் கோபரத் தாக்குதலின் போது செயல்பட்டதைப் போல பாக்கின் மீது குண்டுவீச்சு நடத்தினால் அதை அமெரிக்கா எவ்விதம் எதிர்கொள்ளும் ?

ஒபாமாவின் பதில்:

ஒவ்வொரு நாடும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட உரிமையுள்ளது.


ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் இந்தியா பாக்’கின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் எழுதப் படுகின்றன.

இது போன்ற சூழலில் பாக் ஊடகங்கள் இவ்வித செய்திகளை எப்படி பாக் மக்களுக்குக் கொண்டு செல்கின்றன என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

மாதிரிக்கு இந்த 4 யூ ட்யூப் ஒளிக் காட்சிகளைப் பாருங்கள்.

இவை பாக்'கின் முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பப் பட்டவை;பங்கு பெற்று பதில் சொல்பவர் பாக் ராணுவ ஆய்வாளர்-defence analyst.

பாகம் 1:





பாகம் 2 :




பாகம் 3 :




பாகம் 4 :





பாகம் 5 :




கல்வி அறிவற்ற பாக் மக்கள் பலர் இந்த ஊடகச் செய்திகளைப் பார்த்துவிட்டு மும்பை தாக்குதல் பற்றி எந்த விதமான முடிவுகளுக்க வருவார்கள் என்பது கவலைப்படவைப்பதுப் ஆய்வுக்குரிய ஒன்றுமாகும்.



ஏன் பாகிஸ்தான் இப்படி ஒரு நாடாக இருக்கிறது என்பதும் எப்படி மும்பைக்குத் தாக்க வந்த இளைஞர்கள் போன்ற இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப் படுகிறார்கள் என்பதும் விளங்கும்.



இது போன்ற பரப்புரைகளை செய்யும் பாக் மீடியாவை இந்தியா எவ்விதம் எதிர்கொள்ளப் போகிறது?

Monday, December 1, 2008

84,மும்பை பயங்கரவாதமும் அது பற்றிய சில செய்திகளும் எண்ணங்களும்



தீவிரவாதிகள் கடல்மார்க்கமாகத்தான் வந்தருக்கிறார்கள் என்பதும் கராச்சியிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்ற புலனாயவு உண்மையும் வெளிவந்திருக்கின்றன.

செப்டம்பர் இறுதியில் அமெரிக்க சிஐஏ நிறுவன இந்திய கிளை ரா’வுடன் ஒரு அவசர சந்தப்புக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த சந்திப்பில் லக்ஷர் இ தொய்பா மும்பையின் மீது ஒரு தாக்குதல் நடத்தலாம் என்ற ஊகம் இருப்பதாகவும் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த தாக்குதல் கடலிலிருந்து நடக்கக் கூடும் என்ற ஊகமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உளவுத் தகவல்கள் வேறுசில ஏஜென்ஸிகளில் இருந்தும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றன.

செப்டம்பர் 24 வாக்கில் இந்திய உளவுத்துறை சில உறுதிப் படுத்த முடியாத தகவல்களைப் பெற்றிருக்கின்றன.அவை:

-ல இ தொ.கராச்சியில் மும்பையை கடல் மார்க்கமாகத் தாக்கும் வழிகளுக்கான பயிற்சிகளை சுமார் மூன்று மாதமாக அளித்துக் கொண்டிருக்கிறது.
-ல இ தொ.வின் செயல் நிர்வாகத் தலைவன் பங்களாதேஷ் நிர்வாகப் பிரிவிடம் பன்னாட்டு உபயோக சிம்கார்டுகளை தயார் செய்யப் பணித்திருக்கிறான்.
-இந்தப் பணி(!)க்கான பயிற்சி சாச்சா என்றழைக்கப் படும் ல இ தொ’வின் ஆஸ்தானப் பயிற்சியாளனிம் மேற்பார்வையில் நடந்திருக்கிறது.

()

இந்திய உளவுத்துறை கடலிலிருந்து தாக்குதல் வரலாம் என்ற நிலையில் அது தாஜ் ஒட்டலின் மீது இருக்கலாம் என்றும் எதிர்பார்த்ததாகச் சொல்லப் படுகிறது.நவம்பர் 18 அன்று கோஸ்ட் கார்ட் என்றழைக்கப்படும் கடலோரக்காவல் படைக்கு குறிப்பான தகவலாக கராச்சியிலிருந்து வர வாய்ப்பிருக்கக் கூடிய பாகிஸ்தான் கலங்களின் மீதான கண் வைக்கும்படி செய்தி அளிக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் புத்திசாலித்தனமாக செயல்பட்ட பயங்கரவாதிகள் ஆழ்கடலில் மீன்பிடிக்குச் சென்ற குபெர் என்ற படகைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்;அதில் இருந்த அறுவரில் ஐந்து பேரைக் தலையை வெட்டி கடலில் எறிந்த அவர்கள் அமர்சிங் சோலங்கி என்ற ஒருவனை மட்டும் மும்பைக்கு வழிகாட்டி அழைத்துச் செல்ல ஏதுவாக விட்டு வைத்திருக்கின்றனர்;மும்பை கடல் எல்லைக்குள் நுழைந்து கரையை நெருங்கும் சமயம் அவனுக்கும் பரலோகப் பிராப்தி அளித்துக் கடலில் வீசி விட்டனர்.

கரையோரக் காவல்படை சினிமா போலீஸ் மாதிரி பாக் படகுகளுக்காகக் காத்திருக்க திவிர வாதிகள் எப்போதோ இந்திய மீன்பிடி படகு மூலம் வந்து கரையேறி தாஜிலும் மற்ற இடங்களிலும் சென்று அளித்த பணியை துவக்கி விட்டனர் !


()

கடல் காவல் படையினர் அந்த மீன்பிடி படகில் இருந்து ஒரு ஜிபிஎஸ் சாதனத்தைக் கைப்பற்றி இருக்கின்றனர்.அதில் கராச்சியிலிருந்து மும்பைக்கும் பின்னர் மும்பையிலிருந்து கராச்சிக்கு செல்லவும் இரு கடல் வழிப் பாதைகள் நிறுவப் பட்டிருக்கின்றன(செட்).இது தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு திரும்பிச்சென்று விடும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் என்ற நோக்கில் புலனாய்வாளர்களை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கின்றது.

ஆனால் தீவிரவாதிகளுக்கு திரும்பி விடலாம் என்ற ஒரு பொய்யான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகக் கூட இது செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பவும் இடம் இருக்கிறது.

அல்லது உண்மையிலேயே அவர்கள் தாக்கிவிட்டு திரும்பிவிடும் திட்டத்தில் இருந்திருந்தால் அதில் தாவூத்தின் பங்கு இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் இது கிளப்பி இருப்பதாகத் தெரிகிறது.


()


கரையை நெருங்கிய தீவிரவாதிகள் இரண்டிரண்டு பேராக பிரிந்து ஜோராக வேலையை ஆரம்பித்ததை உளவுத்துறை பல்குத்திக்கொண்டு வேடிக்கை பார்த்ததை நாம் அறிவோம்!


()

தாக்குதல் ஆரம்பமான சில மணித்துளிகளேயே,அதாவது களத்தில் நுழைந்த 10 நிமிடங்களுக்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்புக்குழுத் தலைவரும் மற்றும் எண்கவுன்டர் திறனாளரும் கொல்லப் பட்டு விட்டதாகத் தெரிகிறது.

இது உண்மையில் எவ்வாறு நடந்தது என்பதில் தெளிவில்லை.அவ்வளவு தீவிரமான தாக்குதல் தளத்துக்குள் நுழைந்த அவர்கள் எப்படி அவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க முடியும் என்பது வியப்பான ஒரு விதயம்;அல்லது அவர்கள் குற்றவாளிகளை மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.

அவர்களின் உயிர்த்தியாகம் தவிர்த்திருக்கப் படக்கூடியது,அவர்கள் மேலும் சிறிது எச்சரிக்கையாக இருந்திருந்தால் !


அவர்கள் குறிவைத்துக் கொல்லப் பட்டிருப்பது,தீவிரவாதிகள் தெளிவான செயல் திட்டத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

()


நாரிமன் கட்டடத்தில் மீட்கப் பட்ட பிணையாளர்களின் உடல்கள் விவரிக்க இயலா சித்ரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

விவரங்களை சொல்ல மறுக்கும் அவர்கள் மும்பையின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்த அளவுக்கு சிதைத்துக் கொல்லப் பட்ட உடல்களை இப்போதுதான் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

()


தீவிரவாதிகள் எதிர்பார்க்காத ஒரு விதயம் உயிரோடு ஒருவன் மாட்டியிருப்பது.சிறிது புத்திசாலித்தனம் காட்டிய காவலர்களால் இது சாத்தியமானது.மேலும் விவரங்கள் வரும்போது பல முடிச்சுகள் அவிழலாம்.


இந்த சூழலில் பல 'தியரிகளை' அவிழ்த்து விடும் சில முஸ்லிம் நண்பர்களின் பதிவுகள் அவர்களின் உத்தேசங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன்.

()


சிதம்பரம் உள்துறைக்கு மாற்றப்பட்டிருப்பதும்,பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உயர் அதிகாரியை அனுப்புவதிலிருந்து பின்வாங்கியதும்,பாக் படைகள் எல்லையில் குவிக்கப் படலாம் என்பதும் மேலதிக செய்திகள்.


இந்த மயான சூழலில் அப்பாவி மும்பைக்கர்களும் மும்பைக்குச் அடிக்கடி செல்லும் தேவையிருப்பவர்களும்தான் தாங்க முடியாத உள்ளக் கொதிப்பில் இருக்கிறார்கள்.

ஒரு ட்வின் டவர் தாக்கப் பட்டவுடன் உலகம் முழுக்க சந்தேகப் பட்ட இடங்களில் எல்லாம் குண்டு மழை பொழிந்தார் அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு ஜோக்கர் பிரசிடெண்ட் என்று கருதப் படும் புஷ்;ஒரு பேருந்து நிலைய,ரயில் நிலையக் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தீவிரவாதிகளுக்கெல்லாம் ஆப்படித்து வைத்திருக்கிறது இங்கிலாந்து; 12 முறை மும்பையும் நாட்டின் பல பகுதிகளும் தாக்கப் பட்டபோதும் மமோசிங் மட்டும் தாடியைத் தடவிக் கொண்டு டிவியில் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

வெட்கத்தில் நாம் நாமே தூக்கு மாட்டிக் கொள்ளலாம் !


குண்டடி படாமலாவது சாவோம் !!!!



-அவுட்லுக் மற்றும் ரீடிஃப் தளங்களுக்கு நன்றியுடன்

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...