குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, December 18, 2009

***Aspire-டெம்பளேட்டில் தொழில் நுட்ப உதவி***

வலைப்பதிவுக்கு சுண்ணமடிக்கலாம் என்று முடிவு செய்து blogger கம்பெனி வழங்கிய aspire பெயிண்டை அடித்திருக்கிறேன்.

சில பிரச்னைகள் தெரிகின்றன
1.பதிவின் தலைப்பை க்ளிக்கினால் பதிவுக்குப் போகும் வசதி இல்லை.ஆச்சரியமாக இது பக்கத்தின் முதல் பதிவுக்கு மட்டும் நிகழ்கிறது.பக்கத்தில் 5 பதிவுகளைத் திறந்தால் 2,3,4,5 ஆவது பதிவுகளுக்கு இந்தத் தொல்லை இல்லை,லிங்க் சுட்டியிலேயே தெரிகிறது.ஆனால் தலைப்பக்கத்து முதல் பதிவுக்கு லிங்க் தெரிவதில்லை !

2.அர்க்கைவ்ஸ்'ல் நாட்காட்டியை இணைத்திருக்கிறேன்-தீபா கொடுத்த வழிமுறைகளின் படி.ஆனால் நாட்காட்டியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவைத் தெரிவு செய்தால் கமெண்ட் புக்மார்க் சேமிப்பு ஆப்ஷனுக்கு செல்கிறது.அதே சமயத்தில் நாட்காட்டியின் உள் தேதி எண்ணில் க்ளிக்கினால் அ ந்த தேதிக்குரிய பதிவு ஒழுங்காகத் திறக்கிறது !

3.அப்புறம் இந்த விட்ஜெட்டுகளின் அகலத்தை சிறிது அதிகப்படுத்தவும் விரும்புகிறேன்,any possibility?

ஜாம்பவான்கள் உதவி ப்ளீஸ் !!!!

Wednesday, December 16, 2009

111.சீனர்களின் காவடித் திருவிழா

சிங்கையில் பொதுவாக கரடுமுரடான ஆன்மிகம் இருக்காது;(என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!)எனது அனுபவத்தில் கடந்த 7 வருடங்களில் மனதைப் பதைக்க வைக்கும் ஆன்மிக நிகழ்வுகளை சிங்கையில் பார்த்ததில்லை.

மனதைப் பதைக்க வைக்கும் ஆன்மிக நிகழ்வு ! அது ஆன்மிகத்தில் இருக்க முடியுமா என்ன என்று தோன்றுகிறது இல்லையா ? தமிழகத்தில் மாரியம்மன் கோவில்களில் அளிக்கப்படும் பலிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது பக்ரீத்துக்கு வெட்டப்படும் ஒட்டகங்களின் காட்சி ??இவை போன்ற காட்சிகளுக்கான மூலகாரணமான ஆன்மிக நிகழ்வுகளை விட இவ்வித சமூக பயங்கரங்களை மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளாக நினைவில் தங்கும்.

இவற்றிற்கு சற்றும் குறையாது என்னை கிறுகிறுக்க வைக்கும் ஒரு காட்சி அலகு குத்துதல்.இறைவனுக்காக அல்லது இறைக்காரணத்திற்காக தன் உடலை எவ்வித ரணத்திற்குட்படுத்தவும் தயாராக இருக்கும் ஒரு மேன்மையான நிலைதான் அது என்றாலும் அவற்றைப் பார்க்க மனம் ஒப்புவதில்லை;அதுவும் சிறுதேர் போல,சுமார் 4 அல்லது 5 அடி இருக்கும் இறை பிம்பங்கள் இருக்கும் வாகனத்தைப் பிணைத்த கயிறுகளில் மறுமுனைகளில் மாட்டப்பட்டிருக்கும் கூரிய உலோக வளைவூசிகள் முதுகு பற்றும் தோள் புறங்களின் மேல் தோலை வளைத்துக் குத்தி இழுத்துக் கொண்டுவர அந்த தேர் அல்லது வாகனத்தை இழுத்துக் கொண்டு ஊர்வலமாகச் செல்லும் பக்தர்கள்...எனக்கு காணப் பொறுக்காத காட்சி அது !

பெரும்பாலும் கார்த்திகை மாதங்களில் நடைபெறும் விழாக்களில்தான் இவ்வித பிரார்த்தனைகள் அரங்கேறும்,அதுவும் தமிழ்க்கடவுள் என்று கொண்டாடும் முருகப் பெருமான் பெயரில்தான் இவ்வளவும் நடக்கும்.

ஒரு காட்சி சிறுவயது முதலே என்னை வெலவெலக்க வைப்பது;எங்கள் ஊரில் சூரபதுமன் வதை ஒரு விழாவாகவே நடக்கும்.அச்சமயத்தில் மாலை நடக்க இருக்கும் சூரன் வதைக்கும் முன்னால் முருகப் பெருமான் வீதியுலா இருக்கும்;அந்த ஊர்வலத்தில் சிலர் அலகு குத்திக் கொண்டு வருவார்கள்,சிலர் சுமார் 2 அடி நீளத்தில் இருக்கும மெல்லிய கம்பியால் அமைந்த அம்பை இடுப்பில் இடது வலது விலாப் புறங்களில் குத்திக் கொண்டு வருவார்கள்;அதிலும் ஒருமுறை வந்த ஒரு அன்பர் சும்மா வராமல் அந்த அம்பை ஆர்மோனியம் வாசிப்பது போல் முன்னும் பின்னும் இழுத்துக் கொண்டு வந்தார்;அம்போ விலாப் புறத்தில் சதையில் கிடைமட்ட வாக்கில் குத்தியிருக்கிறது;அணிந்திருக்கும் உடையில் அங்கங்கே ரத்தக் கறைகள்...அப்பா,அந்தக் காட்சி போதுமாடா சாமி என்று நினைக்க வைத்து விட்டது.அன்று முதல் அலகு குத்தியவர்களின் ஊர்வலம் வந்தாலே நான் ஒதுங்கி விடுவது வழக்கம்,அதைக் காணப் பொறுப்பதில்லை என்பதால்!

பக்தியை இவ்வளவு குரூரமாக-ஆம்,எனக்கு குரூரமாகத்தான் தோன்றுகிறது-வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களுக்கான விதை எங்கு விதைக்கப்பட்டிருக்கும்?


தன் கையை கல்லில் உறைத்து சந்தனம் இல்லாக் குறையைத் தீர்த்த மூர்த்தி நாயனார் அல்லது பிள்ளையைக் கொன்று கறி சமைத்த சிறுத்தொண்டர் இவர்களின் கதைகள் உதாரணமாக இருக்குமோ?அல்லது அவர்கள் விளக்க வந்த தத்துவங்களை விட்டு சம்பவங்களை மட்டும் நாம் முன்னெடுக்கிறோமா? அப்படி என்றால் இவை நம் அறியாமையின் அவல விளைவுகளா? எனக்குப் புரியவில்லை!

இப்போது இவற்றின் நினைவு வந்தது சமீபத்தில் சிங்கையில் நான் பார்த்த ஆச்சரியப்படுத்திய நிகழ்ச்சி.இங்கு தைப்பூசத் திருவிழாவின் போது மிகுந்த அளவில் பக்தர் கூட்டம் கூடும் எனவும் அலகு குத்தும் நிகழ்ச்சிகள் அவற்றின் எல்லா பரிமாணங்களிலும் நிகழும் என்று கேள்வியுற்றிருந்ததால் அச்சமயங்களில் அந்த ஏரியாவையே தவிர்த்து விடுவது என் வழக்கம்.ஆனால் ஆச்சரியமாக நான் இருக்கும் பகுதியில் சீனர்களும் கலந்து கொண்ட இந்தியக் கார்த்திகை மாதக் பக்திக் கொண்டாட்டத்தை கண்ணுற நேர்ந்தது.



சிறு தேர்களில் புத்தர் வீற்றிருந்தார்-அல்லது அவரைப் போல எனக்குத் தோன்றியதா தெரியவில்லை.பெரிய படங்கள் திருப்பதி வெங்கடாசலத்திற்கும்,காசி அன்னபூரணி அம்மைக்கும்.ஹோர்டிங்குகளே இருந்தன.


சுமார் 500 லிருந்து 800 பேர்கள் கலந்து கொண்ட இந்த விழா 10 நாட்களுக்கும் மேலாக நடந்தது.கடைசி நாள் ஊர்வலமும் வைத்தார்கள்.



அப்போதுதான் இந்தியர்களுடன் சீனர்களும் கூட அலகு குத்திக் கொண்டு சிறுதேர் இழுத்தார்கள்..இடுப்பிலும் நாக்கிலும் அம்புகள் குத்திக் கொண்டு வலம் வந்தார்கள்.சீனர்களும் இவ்வகை தன்-வருத்தும் செயல்களில் பக்தியின் பெயர் கொண்டு ஈடுபட்டது ஒரு புதிய நிகழ்ச்சியாக இருந்தது !

Saturday, December 12, 2009

ஒரு தீர்க்கதரிசியின் நினைவு !!!!!

உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக் கொண்டு வருகிறதென்பதை தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனதைப் பதியவைத்துக்கொண்டு வெளிஉலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விஷயங்களிலும்,அற்பச்செய்கைகளிலும் நாளையெல்லம் கழியவிட்டு கிணற்றுத்தவளைகளைப் போல் வாழ்வதிலே பயனில்லை.
வர்த்தஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப்புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேட வேண்டும்.படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத் தேர வேண்டும்.ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு,மற்ற ராஜதந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ் பெற வேண்டும்.கைத்தொழில்கள் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன.
திருஷ்டாந்தமாக,நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களுல் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகான் ஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில் இருக்கிறார்கள்.இவர்களுக்குப் படிப்பில்லை;வெளிஉலகின் நிலை தெரியாது;கையிற் முதற் பணமுமில்லை.நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக் கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்.
இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமும் கொடுப்பது.எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்பு எந்திரங்களினாலே செய்யப்படுகின்றன.ஆதலால் நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பல விதங்களிலே அறிவு விருத்தியும் ஜீவன ஸௌகர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத்தொழில் வளர்க்க வேண்டும்.
இனி வர்ணப் படம்,தையல் வேலை,மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களில் அறிவு மிகவும் சிறந்தது.கொஞ்சம் சிரமப்பட்டால்,இத்தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிடலாம்.சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும் ஜப்பானிலிருந்தும் பல சித்திர வேலைகளைக் கொண்டு போய் அமெரிக்காவில் காட்டியபோது,அங்கே அவற்றிற்கு மிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதை நாமேன் செய்யக்கூடாது?
வெளிநாட்டுக்கு கப்பலேறிப் போங்கள்.புறபடுங்கள்.தொழிலாளிகளே,வியாபாரிகளே,வித்வான்களே,புத்திமான்களே,எப்படியேனும் யாத்திரைச் செலவுக்கு பணம் தயார் செய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள்.நமது தொழில்களுக்கும்,கலைகளுக்கும்,யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும்.சந்தேகப்பட வேண்டாம்.
பரோடாவிலிருந்து இநாயக்கான் என்ற சங்கீதவித்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென் ஜில்லாக்காளில் யாத்திரை செய்து வந்தது நம்மிலே சிலருக்கு ஞாபகமிருக்கலாம்.அங்கே அவர் சாதாரணமாக இருந்தார்.பின்னிட்டு அவர் பல தேசங்களில் சஞ்சாரம் செய்து பிரான்ஸ் தேசத்திலே போய் நல்ல கீர்த்தியடைந்திருக்கிறார்.அங்கே பல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புத்திலும் அற்புதம் என்று கொண்டாடுகிறார்கள்.சங்கீத ஞானமுடைய தமிழ்ப்பிள்ளைகள் முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக் கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.இது மிகவும் சுலபமான காரியம்.தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்.இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால் பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும்.அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்த கீர்த்தியும்,செல்வமும் பெறலாம்.
எவ்விதமான யோசனை,எவ்விதமான தொழில்,எவ்விதமான ஆசை,எதையும் கொண்டு பிற தேசங்களுக்குப் போக வேண்டும்.ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவியமில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம்.வெளிஉலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.நமது வரவுக்குக் காத்திருக்கிறது.நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது.வெளியுலகத்தில் நாம் மேம்பாடு பெற்றாலொழிய,இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை.ஆதலால்,தமிழ்ப் பிள்ளைகளே,வெளிநாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும்,மன வுறுதியினாலும்,பல விதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும்,செல்வத்துடனும்,வீர்யத்துடனும் திரும்பி வாருங்கள்.
உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க !

-மகாகவி பாரதி கட்டுரைகள்(சமூகம்-எதிர்காலம்)
தீர்க்கதரிசியான அந்த மீசைக் கவிஞனை நினைவு கூரும் நாள் இது !!!
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்;கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
பிகு:படம் எனது கைங்கர்யம்...


Posted by Picasa

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...