குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, January 25, 2010

114.பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்

இன்றைய உலகில் நாம் எந்த நாடுகளில் வாழ விரும்புகிறோம்?

பெரும்பாலும் மேற்குலக நாடுகள் அல்லது ஆசியாவில் மேற்குலக நாடுகளின் பாவனையில் இருக்கும் நாடுகள்;எடுத்துக்காட்டினால் ஆஸ்திரேலியா அல்லது சிங்கப்பூர்.இவை தவிரமத்திய கிழக்கு நாடுகளின் தேர்வில் துபை அல்லது அமீரக நாடுகள் வர வாய்ப்பிருக்கிறது.

இவற்றை விட்டால் மேற்குலக,ஐரோப்பிய,அமெரிக்க,பிரிட்டிஷ் நாடுகள் தான் நாம் பெரும்பாலும் செல்ல,தங்க,வாழ விரும்பும் நாடுகளாக இருக்கின்றன.இவையே உலகின் முதல் நிலைநாடுகள்.

மற்ற நாடுகள் வளரும் நாடுகள் என்றும் தேர்ட் வோர்ல்ட் என்றும் அழைக்கப்படுகின்றன.சிங்கையின் சீனியர் லீ எழுதிய புத்தகமான சிங்கையின் வளர்ச்சியை விவரிக்கும் இரண்டு புத்தகங்களில் இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே From Third World to First World என்பதுதான்.

என்ன காரணம்?

மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிலவும் கட்டமைப்பு வசதிகள் முதல் காரணம்.வீட்டிலிந்து,தண்ணீர்,மின்சாரம்,போக்குவரவு போன்ற எந்த தேவைகளுக்கும் சாமானிய மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக வேண்டிய நிலவரம் இந்த நாடுகளில் இல்லை.காசைக் கொடுத்தால் எல்லாம் சட்டென கிடைக்கும்;அதுவும் பொருளுக்கு அல்லது சேவைக்கு வேண்டிய அளவில்
கொடுத்தால் போதும்;இடைத்தரகாகவோ கையூட்டாகவோ பெரும்பணம் செலவு செய்ய வேண்டியது இல்லை.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அரசால் நிகழ்த்தப்படும்,அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் அழுத்தங்கள் இல்லை.

இரண்டாவது காரணம் சாதாரண மனிதனின் சம்பாத்தியத்திற்கும் அவனது தினப்பாட்டின் செலவுகளுக்குமான விகிதாசர வேறுபாடு.அதாவது அமெரிக்காவில 5000 டாலர் சம்பாதித்தால் எளிதாக 2500 டாலர் செலவுக்குள் ஒரு மாத செலவுகளை சமாளிக்க முடியும்.சிங்கையிலும் இதே நிலைதான்(சமீப நாட்களான வீட்டு விலை,மட்டும் வாடகை நிலவரம்
தவிர்த்து!).இந்தியாவில் இருந்து பெருமளவில் வரும் தொழில் நுட்ப பணியாளர்கள் இந்த அளவில் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் இதே நிலை இந்தியாவில் பணியாற்றும் ஒருவருக்கான குடும்ப செலவுகள் சம்பாத்தியத்தில் 50 சதவீதத்திற்கள் அடங்குமா என்பது கேள்விக்குறி.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தன்னுடைய சம்பாத்தியத்தில் எளிதாக 50 அல்லது 40 சதம் சேமிக்க முடியும் என்பது இந்த நாடுகளில் சாத்தியம்;இந்தியாவில் இது சாத்தியம் இல்லை.அதிகப்படியான சமூக வாழ்வின் பத்திரம் மற்றும் ஒழுங்கு ஆகிய காரணங்கள்.

இவை பற்றிய காரணங்களே பெருமளவு வெளிநாட்டுக்கு செல்லும் நுட்பத் தொழிலாளர்கள் அந்தந்த நாடுகளிலேயே தன் வாழ்க்கையைத் தொடர்வதின் காரணம்.


அடுத்த முக்கியமான காரணம் நாணயப்பரிவர்த்தனையின் இந்தியாவில் கிடைக்கும் அதிக சேமிப்புத்திறன்.அதாவது மேற்கண்ட நாடுகளில் சம்பாதித்து இந்தியாவில் சேமித்தால் இந்திய ரூபாயின் மதிப்பில் குறுகிய காலத்தில் சேமிக்க முடிந்த அதிகப் பணம்.

இக்காரணங்களால் இன்றைய இந்தியாவில் வாழ ஒரளவு படித்த,வாழ்வை அனுபவிக்க விரும்பும் பெரும்பான்மையானவர்கள் விரும்புவதில்லை;மாறாக வெளிநாட்டு வாழ்வை விரும்புகிறோம்.

ஆனால் சென்ற ஆண்டில் நடந்த பொருளாதார,நிதிப் புயலில் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் மேற்குறிப்பிட்ட நாடுகளே முதலாவதாக இருந்தன.சொர்க்கம் போன்ற வாழ்வு என்று நினைத்த நாடுகளில் வாழும் நிலையைத் தேரந்தெடுத்த சில இந்தியர்கள் தற்கொலை முடிவு எடுக்கும் நிலை வரை சென்ற நிகழ்வுகள் நடந்தன.

முதல்நிலை அதாவது ஃபர்ஸ்ட் வேர்ல்ட் நாடுகள் என்றழைக்கப்பட்ட நாடுகளே நிதிச் சந்தை வீழ்ச்சியில் அதிகம் சிதைவுற்றன !

ஆசியாவின் 'வளரும் நாடுகளான'' இந்தியாவும் சீனமும் இந்த சுழிக்காற்றில் அதிகம் பாதிக்கப்படவில்லை.அங்கெல்லாம் சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் புரட்டிப்போடும் மாற்றங்கள் நிகழவில்லை;கண்ட சிறிய பின்னடவையும் மீறி முன்னேற்றம் காணத் துவங்கிய நாடுகளிலும் இந்த இரண்டு நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.பிரிட்டன்.ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் இன்னும் அடிவயிற்றில் நெருப்புடன் இருக்கின்றன.

இடைப்பட்ட சிங்கை மற்றும் ஆஸ்த்ரேலிய நாடுகளில் நடுவாந்திரமாக இருக்கின்றன,மதில் மேல் பூனை போல.

அதிலும் சிங்கையின் கதை முற்றிலும் மாறுபட்டது.லீ க்வான் யூ என்ற
அதி புத்தி சாலியான ஆட்சியாளரின் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் ஆலோசனையின் படியே பெரும்பாலும் சிங்கையின் பொருளகாதார,சமூகக் கொள்கைகள் கட்டமைக்கப்படுகின்றன;இவை ஒரு தனிப் பதிவில் விவாதிக்க வேண்டிய விவரங்கள்.

ஆக நிதிச்சந்தையில் அடித்த புயலில் அதிகம் ஆட்டம் கண்ட நாடுகள் முதல் நிலை நாடுகளே,மூன்றாம் நிலை நாடுகள் அல்ல.

என்ன காரணம்?

நமக்கெல்லாம் வரலாற்று நினைவு மிகவும் சமீப காலத்தியது.இந்திய வரலாறை எடுத்துக் கொண்டாலும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடு என்றும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்றும் பெரும்பாலும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகள் மேற்குலக நாடுகளாக இருப்பதுமாக ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது.

ஆனால் இந்தியா இப்படி மூன்றாம் உலக நாடாகவே இருந்ததா?

பாரதப் பொருளாதாரம்;அன்றும்,இன்றும் என்ற தலைப்பில் கிழக்கு வெளியீட்டில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது.அதன் உள்ளடக்கம் ஒரு தெளிவான பார்வையை முன் வைக்கிறது.இந்த புத்தகம் தரும் செய்தியைப் பற்றி நான் முன்பே அறிந்திருக்கிறேன் எனினும் ஒரு புத்தகவடிவில் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய இப்படி வரு பார்வையே எதிர்கொண்டது இப்போதுதான்.

ஆசிரியருக்கும்,அவரின் ஒரு உரையைக் கேட்டு அதனால் மிகவும் கவரப்பட்டு அதை ஒரு புத்தகவடிவில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பத்ரிக்கும் பாராட்டுக்கள்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய சுமார் 2000 ஆண்டுப் பார்வையை முன்வைக்கிறது புத்தகம்.

17 ம் நூற்றாண்டு வரை உலகப் பொருளாதாரத்தின் சுமார் 65 சதவிகிதப் பங்கை சீனமும் இந்தியாவும் வைத்திருந்திருக்கின்றன.இந்தியாவின் பங்கு சுமார் 30
சதவிகிதம்.இந்தியா.பழங்கால தமிழகத்தின் வரலாறுகளில்,சோழர்கள் ஆட்சியில் பல வரலாற்றுக் குறிப்புகளில் இந்தியா உலக நாடுகள் பலவற்றுடனும் செய்த வணிகம் பற்றியும் இந்தியாவில் குவிந்திருந்த செல்வ நிலை பற்றியும் பல குறிப்புகள் கிடைக்கின்றன;அவற்றை இப்புத்தகம் குறிப்பிட வில்லையெனினும் முகலாய அரசர்களை முதன் முதலில் சந்திக்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதர்கள் அரண்மனையில் எங்கும் புழங்கிய தங்கப் பாத்திரங்களைப் பார்த்து மூச்சடைத்து நின்ற செய்தியும்,இந்தியாவை முழுமையாக காலணியாதிக்கதில் கொண்டு வர வேண்டும் என்று அவர்களுக்கு உதயமான உத்தியும் மறைக்கப்பட்ட வரலாற்றின் பகுதிகள்.

சுமார் 300 ஆண்டுகளாக பிரிட்டிஷ் சுரண்டிய இந்தியாவின் செல்வமே பிரிட்டன் முதல் உலகத்திற்கு முன்னேறிய செய்தியின் சுருக்கம்.இந்தியா என்னும் தங்கச் சுரங்கம் கையில் அகப்படும் வரை அமெரிக்காவுடன் ஆண்டு வரிக்காக போரிட்டுக்கொண்டு ரௌடித்தனம் செய்து கொண்டிருந்த நாடு பிரிட்டன்.இந்தியா பிரிட்டனின் நேரடி ஆதிக்கத்தில்,அதாவது விக்டோரியா மகாராணியின் ஆதிக்கத்திற்கு கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து மாறிய போது இங்கிலாந்து அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அளித்த பெரும்தொகையும் திரும்பவும் இங்கிலாந்து அரசால் இந்தியாவிலிருந்தே சுரண்டப்பட்டது,வரி விதிப்பின் மூலம்!இது போக வைசிராய்கள் போனபோதும் வந்த போதும் கப்பல் கப்பலாக இந்தியாவின் செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன.ஒரு கப்பலில் எவ்வளவு செல்வம் தங்கம்,வைரம்,கனிமப் பொருள்களாக ஏற்றப்பட முடியும்? 300 ஆண்டுகளில் எவ்வளவு செல்வம் சுரண்டப்படலாம்?

இவ்வளவு சுரண்டலுக்குப் பின்னும் சுமார் 60 ஆண்டுகளுக்குள்,எதிர்காலத்தின் வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் இருக்கக் கூடும் நாடாக இந்தியா வலிமை பெற்றதற்குக் காரணம் என்ன?பலர் 90 களுக்குப் பிறகான புதிய பொருளாதாரக் கொள்கை காரணம் என்று எண்ணலாம்,அது ஒரு காரணியாக இருந்தாலும் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் நீண்ட கால நோக்கில் அதிகமாக இருக்க முடியும் என்ற ஒரு பார்வையையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.

அந்தக் காரணம் என்ன என்பதைப் பற்றிய என் சிந்தனையின் அனுமாணங்களையே புத்தகமும் சுட்டியது எனக்கான இனிய ஆச்சரியம்.இங்கு விளக்கி விடலாம் என்றாலும் புத்தகத்தைப் படிக்கும் சுவை மாறாமல் இருக்க வேண்டும் என்பதால்,புத்தகத்தைப் பரந்துரைக்கிறேன்.

எனக்குத் தோன்றிய சில குறைகள்:

1.புத்தகத்தில் கூறியது கூறல் அதிகமாக இருப்பது போல இருக்கிறது.

2.செய்திகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் வடிவம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது;புத்தகத்தை ஒரு மூச்சில் படிக்கும் போது கருத்தாக்கம் அங்கங்கு அலைவது போல ஒரு தோற்றம் தருகிறது.அதைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

3.சான்றுகளைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்புகளை அந்தந்தப் பக்கத்தில் அளித்திருந்தால் நம்பகத் தன்மை இன்னும் அதிகரித்திருக்கலாம்.

ஆனாலும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்!

பாரதப் பொருளாதாரம்:அன்றும்,இன்றும்
ப.கனகசபாபதி
கிழக்கு வெளியீடு.
விலை:ரூ.125

Monday, January 11, 2010

113.தமிழில் பாடுவது கேவலமா?

தமிழின் தொன்மையில் இசைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு;இன்னும் சொல்லப் போனால் தமிழ் மொழியை இயல்,இசை,நாடகம் என்று அகன்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டு அந்தந்தப் பிரிவுகளில் மொழி வளம் வளர பல ஆக்கங்களை இயற்றி செழித்த மொழி தமிழ்.

உலகின் முதல் இசைக் கருவிகளில் ஒன்றாக முடியும் என்று எளிதாக வரலாற்றுச் சான்றுகளின் மூலம் நிலைநிறுத்தக் கூடிய சில இசைக் கருவிகள் தமிழ் நாட்டில் தமிழ் மொழியாளர்களால் உருவாக்கப்பட்டவை.(குழல்,யாழ்..)அது மட்டுமல்ல அவை தமிழுக்கே உரிய சிறப்பான இசைக்கருவிகள் என்று எத்தலைமுறைக்கும் புரியும் வண்ணம் அக்கருவிகளுக்கு மொழிக்கேயுரிய சிறப்பான ஓசையை நினைவுறுத்தும் பெயரை விளித்து மகிழ்ந்தவர்கள் தமிழின் இசை வாணர்கள்.

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு என்ன என்பதறியாமலோ அல்லது இன்று கர்நாடக இசை என்ற என்ற பெயரில் வழக்கப்படும் இசைக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்ற கருத்தாக்கதினாலோ பல இளைய தலைமுறையினர் இன்றைய சாஸ்திரீய சங்கீதமான 'கர்நாடக' சங்கீதம் தமிழர்களுக்குத் தொடர்பற்றது என்றும்,இன்று பெருமளவு அதைப் பாடுபவர்களின் மேலுள்ள வெறுப்பைக் காண்பிக்க இசையே எள்ளுவதுமாக தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுகள் வியர்த்தமாகிப் போயின;இன்றைய இளைய தலைமுறையிலும் பண்பட்ட இசையை வளர்ப்பவர்கள் அல்லது அதைக் கற்றுத் தெளிந்து பாவனையில் வைத்திருப்பவர்கள் எப்போதும் அதைப் பாடிக்கொண்டு வந்திருப்பவர்களே!

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு பற்றிய இரண்டு பத்திகளை முன்னரே நான் எழுதியிருக்கிறேன்;அதன் பின்னூட்டங்களில் கூட என் நண்பர்கள் நான் துவேஷம் கொண்டு சில கருத்துகளை எழுதி இருப்பதாக கருத்து அறிவித்தார்கள்.அது அப்படி அல்ல என்று நான் விளக்கம் அளித்தேன்;நான் ஏன் அவ்வாறு எழுதினேன் என்றும் விளக்கினேன்.அவற்றிற்கான காரணங்கள் இன்றும் இப்போதும் இருக்கின்றன என்பதை நிறுவுகிறது தினமணியின் தலையங்கம் ஒன்று.

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​


73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந ​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​

பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
-தினமணிக்கு நன்றியுடன்-

பொதுவான மக்கள் இன்னும் விழிப்படையவில்லை;சமூகத் துவேஷத்தை ஊக்குவிக்கும் அரசியலாளர்களோ இன்றும் வேறு ஏதும் காரணிகள் இல்லாத நேரத்தல் 'அரசியில் பிழைக்க' கையில் எடுக்கும் ஆயுதம் பழம் பஞ்சாங்கம்தான்!ஆனால் அவர்களின் குழந்தைகள் மணம் புரிவது அவர்கள் காலமுழுதும் நிந்திக்கும் வகுப்பினரையே என்பது சாதாரண மக்களுக்கு நினைவில் இருக்காது எனபதுதான் ஒரு முரண்.

இத்தகைய சூழலில் மேற்கண்ட தலையங்கத்தில் குறிக்கப்பட்ட தீர்வையே நான் என் முந்தைய பதிவுகளிலும் முன்வைத்தேன்;அதாவது பொது அரங்கங்களில் பாடும்போது தமிழிழ்தான் பாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் எந்தமொழிக் கீர்த்தனைகளை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்தாலொழிய பாடகர்களின் மனோபாவம் மாறுவது கடினம்.

இதற்கு நண்பர்கள் லக்ஷமி நரசிம்மன், கமகம் லலிதா ராம் ஆகியோர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Friday, January 1, 2010

112.குறுந்தொகை'கள்-01/01/2010

வலைப்பக்கங்களில் இப்போது அதிகம் எழுதித்

தள்ளப்படும் வஸ்துவாக மாறிக் கொண்டிருப்பது

கவிதை.கவிதைகள் என்று எழுதப்பட்டிருக்கும் பல

பத்திகளைப் படிக்கும் போது தொண்டை ஞமஞம

என்று ஒரு புதுவித அவஸ்தை உணர்ச்சி பீறிடும்

வகையான புதுக்கவிதைகள் அதிகம்

எழுதப்படுகின்றன.எந்தவிதமான கவிதை அனுபவமோ,நிகழ்வு

நெகிழ்ச்சியோ விவரிக்காத இவ்வகைப் பத்திகளை

மாய்ந்த மாய்ந்து எழுதும் அன்பர்கள் எல்லாம்

பேருந்து நிலையங்களில் விற்கப்படும் கவிதை

ஊக்கியான குஸ்கான் கவிதை லேகியம் மாதிரி

ஏதாவது வாங்கி மகிழ்ந்திருப்பார்களா என்று

தெரியவில்லை.இவ்வகைக் கவிதைப் பத்திகளை எழுதுவது ஒன்றும் சிரமமான காரியமல்ல;உங்களுக்குப் சிந்தையில் பீறிடும் எண்ணங்களை ஒரு பத்தியாக முதலில் எழுத வேண்டியது,பின்னர் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு அப்பால் எலிக்குட்டியை வைத்து ஒரு எண்டர்'தட்டு தட்ட வேண்டியது...இவ்வகை முயற்சியை சளைக்காமல் முழுப்பத்திக்கும் நீட்டினால் தீர்ந்தது விஷயம்,கவிதை ரெடி!சமீபத்தில் வலையுலகில் எண்டர் கவிதைகள் என்று ஒரு பதம் வழக்கில் இருக்கிறது;அது இவ்வகைக் கவிதைகளைத்தான் சுட்டுகிறதோ என்று ஒரு சம்சயம் எனக்கிருக்கிறது.

()


விஜய் தொலைக்காட்சியில் வரும் சூப்பர் சிங்கர்/ஜூனியர் நிகழ்ச்சி தவற விடக் கூடாத ஒரு நிகழ்ச்சியாக சமீப காலங்களில் மாறிவருகிறது என்று நான் ஏற்கனவே சில பத்திகளில் சொல்லியிருக்கிறேன்;இந்த நிகழ்ச்சி சமீப நாட்களில் சேர நாட்டுப் பெரும்பான்மையினரால் ஆக்கிரமிக்கப் படுகிறதோ என்று ஒரு நினைவு வருவதை தவிர்க்க இயலவில்லை;நீதிபதிகளில் இருந்து தொகுப்பாளரிலிருந்து,பாடுபவர்கள் வரை பெரும்பான்மையினர்கள் மலையாள நண்பர்களாக இருப்பதன் ரகசியம் அல்லது அல்லது அது அல்லாத தன்மை என்ன என்பது விளங்கவில்லை.

ஆனாலும் சிறு குழந்தைகள் என்னமாய்ப் பாடுகிறார்கள் என்பதை பார்த்தால்தான் நம்ப இயலும் போலிருக்கிறது;ஒரு தொழில்முறை பாடகருக்கிருக்கும் பெர்பெஃக்ஷன் 12 வயது குழந்தைகளின் பாடல்களில் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது நமது தலைமுறைக்கும் அடுத்த இளைய தலைமுறைக்குமான திறன்/ஊக்கத்தில் இருக்கும் வேறுபாடு வியப்பான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அதிலும் ஒரு லட்ச ரூபாய்க்காக சிறுவர் சிறுமியர் போட்டியிட்ட சமீபத்திய-இது உண்மையிலேயே ஒரு வாரத்துக்குள்ளான சமீபத்திய'-எபிசோடில் அல்கா மற்றும் ரோஷன் ஆகியோர் பாடிய -அதிலும் கடைசி சுற்றை-சுற்றை பார்க்க/கேட்க வாய்ப்பில்லாதவர்கள் அபாக்கியவான்கள்!

()


சென்ற 2009 மற்றும் ஒரு வருடம் என்ற அளவில் பலருக்கு இருந்தாலும்,இலங்கையில் நடந்த நிகழ்வுகள் மாறாத வடுவாக தமிழர்களின் துயர நினைவில் பதித்துவிட்டுச் சென்ற ஆண்டு.அதிலும் புலிகளின் தலைவர் இறந்திருக்கலாம் எனில் அது எவ்வாறு நடந்தது என்பதை காட்டும் ஒரு ஒளித்துண்டு இணையத்தில் வந்தது.ஒரு மனிதனின் மீதான வன்முறை எவ்வளவு கோரமாக வெளிப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற எண்ணத்தின் எல்லைகளை மீறிய அந்தச் செயல்கள் எந்த ஒரு நாட்டின் ராணுவமும் செய்யக்கூடிய செயல்களல்ல.

ஒட்டியும் வெட்டியும் பல விவாதங்களும்,பல தியரிகளுக்கான புத்தகங்களும் வெளிவரும் இந்த நேரத்தில் ஒரு உண்மை மட்டும் முகத்தில் அறைகிறது;புலிகள் மற்றும் பிரபாகரனின் இருப்பு மறைந்த சூழலில் இலங்கையில் தமிழர்கள் நீரிலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன்கள் போல!கழுகுகளோ அல்லது காக்கைகளோ கொத்துவதற்கு எந்த தடையும் இல்லை;அதைத் தட்டிக் கேட்கவும் எந்த நாதியும் இல்லை.

இந்திய தமிழக அரசுகள் ?

தூ வென காறித் துப்பினாலும் சுரணையற்ற பதவி வெறியர்களின் இருப்பு எங்கும் இருப்பது பற்றிய பொருட்படுத்தலில்லாத மக்களும்,மக்களுக்காக அரசு என்பதைப் காற்றில் பறக்க விட்டு விட்டு ஒட்டுக்களை பணத்தை எறிந்து வாங்கி விட முடியும் என்று நம்பும்,நடத்திக் காட்டும் அரசும் வழமையாகி விடுமோ என்ற பயம் வருகிறது.

2009 க்கான இனிமையான மீள்நினைவு எவருக்கும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.


()


ஜெமோ,மனுஷ்யபுத்திரன்,சாரு தொடர்பான சில நிந்தனை/எதிர் நிந்தனைகள் இணையத்தில் இறைத்து விடப்பட்டிருக்கின்றன.பெரிய மனிதர்களாக வேடம் போடுபவர்களின் சின்னத் தனங்கள் வெளிவரும் போது பொறுக்க முடியாத நாற்றத்தைக் கிளப்பும் என்பதற்கான சான்றுகளே இவை என்று சொல்வதைத் தவிர ஒன்றும் இல்லை.

ஆனால் கவிதைக்கான பார்வை பற்றிய ஜெமோவின் பார்வை பற்றிய ஒரு விளக்கப் பத்தி என்னைக் கவர்ந்தது.கொஞ்சம் புண்-நவீனத்துவமாக இருந்தாலும்!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...