குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Sunday, August 19, 2012

* * * * * 169.உளத் தீர்த்தம்-நாளொரு பாடல்-15



உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.


நூல் : பத்தாம் திருமுறை | திருமந்திரம்

ஆசிரியர் : திருமூலர்
தந்திரம் : இரண்டாம் தந்திரம்
பாடல் எண் : 18

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெட
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடை கல்வி இலாரே

முக்கிய சொற்கள்:
வினை- நல்வினை, தீவினைப் பயன்கள்
ஆடார் - தீர்த்தமாடுதலைச் செய்யாதவர்

பொருள்:
வஞ்ச மனம்  படைத்த, கல்வி அறிவு அற்ற அறிவிலிகள், தேசத்தில் பல்வேறு இடங்களுக்கு, மேடும் பள்ளமுமான இடங்களுக்கு அலைந்து திரிந்து, கோவில்களுக்குத், தீர்த்தமாடுதலை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்கிறார்கள்; அது போன்ற அறிவிலிகள், தத்தமது உள்ளத்தை நல்ல சிந்தனைகளாலும், அறிவாலும் நிரப்பினால், உள்ளத்தின் உள்ளேயே அந்த நற்பண்புகள், தீர்த்தங்கள் போலத் திகழும்; அத்தகைய நற்பண்புகள் நிரம்பிய மனமாகிய தீர்த்தங்களில் மூழ்குதலைப் பயிலும் போது, நமது வினைப் பயன்கள் ஒழிந்து (நாம் பிறவாப் பெருநிலையை அடைவோம்.) நல் நிலையை அடைவோம்.

டிட்பிட்ஸ்:

  • உள்ளத்தின் உள்ளே தீர்த்தங்கள் உள்ளன் என்றது சிந்திக்கத் தக்கது.நற்பண்புகள் நிரம்பிய அறிவுடையோரின் உள்ளம் அல்லது சிந்தனை நல்ல தீர்த்தங்களை ஒத்தது. புனிதத் தீர்த்தங்களில் மூழ்கி எழுவது போல, நல் மனத்தில் மூழ்கி எழும் போது நற் சிந்தனைகள் எழும்.
  • மெள்ளக் குடைந்து நீராடச் செல்வதும் யோசிக்க வேண்டியது. தூய நீர்த் தடாகங்களில் நீந்தித் திளைத்து நீராடும் போது உடலானது, சொல்ல இயலாத புத்துணர்வு பெறுகிறது; நற் சிந்தனைகள் நிரம்பிய உள்ளத்தை சிந்தனைகள் குடையும் போது, சிந்திப்பவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களைச் சுற்றியிருப்போரும் அந்த நல்ல சிந்தனைகளால் நன்மை அடைகின்றனர்.
  • தீர்த்தங்கள் குளிப்பவரைக்கு உடல் தூய்மையை மட்டும் அளிக்கும்; உள்ளத் தீர்த்தமாடல், சிந்தனைத் தூய்மையையும் அதன் மூலம் நல்வாழ்வையும், அவர்களைச் சார்ந்த நல்ல சூழலையும் தருகிறது.
  • தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு என்றது வள்ளுவர் வாக்கு. மேலும் மேலும் கற்பதற்கு ஏற்ற அளவு அறிவானது விரிவு பெருகிறது; விசாலமடைகிறது. எனவேதான் மெள்ளக் குடைந்து, நின்று , ஆடார் என்ற வார்த்தைகளை வைத்திருக்கிறார் தீருமூலர். அறிவுத் தீர்த்தமாடல் நிதானமாக, ஆழ்ந்து, பலமுறை நிகழும் போது அதனால் கிடைக்கும் பயனும் அளப்பரியது.




15  | 365

2 comments:

  1. அருமையான விளக்கம் சார்... மிக்க நன்றி...

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...