குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, September 29, 2012

176.குறுந்தொகை'கள்-29.09.2012-சில்லரை- விற்பனை|அரசு|தலைமை|தேசியம் !!!

சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு பற்றிப் பலர் எழுதி விட்டார்கள்.இதில் வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் என்று அறியப் பட்ட பதிவர்கள் அந்தந்த நோக்கிலேயே எழுதியிருக்கிறார்கள்; இதில் வியப்பு இருக்கப் போவதில்லை.(எடுத்துக்காட்டு-பத்ரி சேஷாத்ரி அரசின் இந்த முடிவை வரவேற்று எழுதியிருப்பது மற்றும் வினவு இந்த முடிவை எதிர்த்து எழுதியிருப்பது).


எனக்கு என்னமோ பண்ணுது...சந்திரமுகி!!!

பதிவுலகைப் பொறுத்த வரை பலர் இதைப் பற்றி எழுதியிருந்தாலும், புரூனோ வின் பதிவும் சரியான கருத்தை எடுத்து வைத்தது(சற்று நீளமாக இருந்தாலும்). சுருக்கமாக அவர் சொன்னது, சில்லரை விற்பனையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் விதயத்தையும் 1991 ன் பொருளாதார சீர்திருந்தங்களையும் ஒப்பிட்டு, முன்னதை வரவேற்ற பலர் பின்னதை எதிர்ப்பது ஏன்?' என்ற கேள்விக்குப் பதிலாக அவர் சொல்லியிருந்தது: முன்னதில் நாம் பயனாளர்(Service Provider, we provided some service and got benefited); பின்னதில் நாம் வாடிக்கையாளர்.(We are consumers, we consume and pay for the consumption).


Friday, September 21, 2012

175.சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு- அடிமைகளின் முடிவா?

மைய அரசின் தான்தோன்றித் தனம்

இந்திய மைய அரசு சில்லரை வணிகத்தில் 51 சதவிகித வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது என்ற கொள்கை முடிவை அறிவித்த 24 மணி நேரத்தில் மமதை பானர்ஜி மைய அரசுக்கான தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறார். உடனை, ஆகா,இந்தியாவில் சிலர் மக்கள் நலன் பற்றிச் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், உங்களைக் கோமாளி ஆக்கும் படி மமதை ராணி சொன்ன காரணம், காங்கிரஸ் மைய அரசு தன்னுடைய கட்சியை,இரண்டாவது பெரிய கூட்டு பொரியல் இன்கிரிடியென்ட் என்ற அந்தஸ்தில் மதித்து தன் கருத்தைக் கேட்டு முடிவை அறிவிக்கவில்லை' என்பது.

அவருடைய கருத்தைக் கேட்டு அறிவித்திருந்தால் பேசாமல் இருந்திருப்பாராயிருக்கும் !

காங்கிரஸ் மைய அரசு முக்கியமான கொள்கை முடிவுகளை இப்படித் தான்தோன்றித் தனமாக அறிவிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்; நாடாளுமன்ற கூட்டத் தொடர் இனி சனவரியில்தான் வருகிறது. நியாயமாக அரசின் கொள்கை முடிவுகள் கூட்டத்தொடரின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டு அறிவிக்கப்படவேண்டும்.

Sunday, September 9, 2012

174. சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-யார் இறுதிப் போட்டியில்?




சூப்பர் சிங்கர் ஜூனியர் பருவம் மூன்று நிகழ்ச்சி பெரும்பாலும் பலர் தவற விடாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. நானும் கூடத்தான்...

இந்த தலைப்பில் ஏற்கனவே சில அசட்டுப் பதிவுகள் வந்து விட்டன; இருப்பினும் இந்த நிகழ்ச்சியை நேற்று இரவு பார்த்த போது எழுந்த சிந்தனைகளைப் பகிரலாம் என்பதால் இந்தப் பதிவு.

இப்போது முதல் 5 போட்டியாளர்களுக்கான தேர்வுக்கான சுற்று நடைபெறுகிறது.(இந்தியாவில் இந்த சுற்று முடிந்திருக்கலாம்;சிங்கையில் இப்போதுதான் போய்க் கொண்டிருகிறது!)

இறுதிப் போட்டியின் வடிவம் எப்படி என்று தெரியவில்லை.ஆனால் அன்ப்ளக்ட் சுற்று முடிந்ததில் ஜயந்த் போட்டியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.ஆனாலும் சிறப்பான சலுகையாக அதிரடி சுற்று வாய்ப்பாக-வைல்ட் கார்ட் ரவுண்ட்- இறுதிப் போட்டியில் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருகிறார்.

Wednesday, September 5, 2012

173.ஆப்பிள் Vs மற்றவை- எது நிற்கும் ???

2000"ங்களில் தொழில் நுட்பம் மூலம் பயனாளர்களில் உலகின் பெரும் பகுதி மக்களைப் பாதித்த பொருட்களைப் பட்டியலிட்டால் அதில் ஆப்பிள் பொருள்களின் பங்கு பெரியது.முதலில் சிறிய ஐபாட் 2002\3 ல் வந்ததிலிருந்து பின்னர் ஐபேட், ஐபோன், ஐபாட் டச், ஐமேக் என்ற ஐந்தே பொருள்களைத் தயாரித்த ஆப்பிள் நிறுவனம் இன்றைய தேதியில் உலகில் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனம் என்ற உச்ச நிலையை ஜீலை\ஆகஸ்ட் 2012 ல் அடைந்தது.(coveted position of Most vlauable company in terms of market capitalisation-around 650  billions in USD terms)
ஐஃபோன் 4S


உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...