குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, May 23, 2016

193-வெள்ளையானை - நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுங்கதை அனுபவம்



வெள்ளையானை- நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுங்கதை அனுபவம் !

ஜெமோ எழுதிய வெள்ளையானை என்னும் நெடுங்கதைப் புத்தகத்தை இப்போது(தான்) படித்தேன்.

எய்டன் என்ற அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்துப் படையில் சேர்ந்து காலனிய நாடான இந்தியாவில் மதராசப் பட்டனத்தில் கேப்டன் பொறுப்பில் இருப்பவனுடைய பார்வையில் விரிகிறது கதை. இன்றைக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான ஆண்டான் அடிமைத் தனமான மனோபாவம் உச்சத்திலிருந்த 1870 கள்தான் கதைக்களத்தின் காலம்.

மதராசப் பட்டினத்தில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான ஐஸ் ஹவுசில் நிகழும் தொழிலாளர்களின் மீதான கொடுமைகளும், அவர்களின் பனிச் சூழல் நரகநிலையும், தினக்கூலிகளாக எந்தவிதப் பெயரடையாளங்களுமற்று தினப்படி வேலைக்கு வரும் எண்ணிக்கையால் மட்டுமே அமைந்த அவர்கள் வாழ்வியல் கொடூரங்களும், அவர்களை கண்காணிக்கும் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்த கண்காணிகளிடத்து பஞ்சமர்களான தொழிலாளர்கள் அடையும் விலங்குகளை விடக் கேவலமான வாழ்வு நிலையும் அமைந்த சூழலை, அத்தொழிலாளர்களில் இருவர் தங்கள் நிலை குறித்துப் புகார் செய்ய முயற்சித்ததனால் கடைசியாக் கொன்று, கடலில் வீசப் படுகிற கணவன் மனைவியான இரு தொழிலாளிகள், கேப்டன் எய்டன் கண்ணில் பட்டு அறிமுகமாகும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த நெடுங்கதை!

ஆட்சி நிகழ்த்தியிருக்கும் அவலம்...1877 காலகட்டம்

Monday, May 16, 2016

192. தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2016 - 1



சட்டமன்றத் தேர்தல் 2016 - வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கும் இந்த தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் தேர்தல். எவ்வகையில்?
Image result for election 2016 tamilnadu-images


-திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தோன்றி,வளர்ந்து வேரூன்றியதற்கான சமூக பொருளாதாரக் காரணங்கள் வலிமையானவையே.ஆனால் திராவிடக் கட்சிகள் முன்வைத்த சமூக நீதி என்ற இலக்கிலிருந்து அவை விலகத் துவங்கிய 80 களில் இருந்து துவங்கிய அக்கட்சிகளின் தார்மீக வீழ்ச்சி அதன் உச்சத்தை அடைந்த காலகட்டம் என்று 2006-2011, 2011-2016 ஐச் சொல்லலாம். திராவிடக் கட்சிகளின் இரு பெரிய வடிவங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இந்தக் காலகட்டங்களில் நடத்திய ஆட்சி அழகைக் கண்டு மொத்தத் தமிழகமும் வெதும்பும் நிலைக்கு வந்துவிட்ட நிலையில் நடக்கும் தேர்தல் இந்தத் தேர்தல்.
Image result for sagayam ias

-இந்த வெதும்பல் நேர்மையாகச் செயல்படும் அதிகாரி என்றறியப் பட்ட ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரான திரு.சகாயம் அவர்களை மாநிலத் தலைமை ஏற்க வரும்படி பெருவாரியானவர்கள் மன்றாடி அழைத்த சூழல்

Tuesday, May 3, 2016

191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்!

சென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் ஒரு முன்னேற வேண்டிய நாட்டின் முறையா என்பதை நாம் கேள்விப் படுத்த வேண்டும்.

அரசாண்மை முறைகளில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரும் போது குறைந்த பட்சம் சாதாரண மக்கள் இந்த வழக்காடு வட்டத்தில் தங்களுக்குத் தேவையான நிவாரணத்தைப் பெறும் வழிவகைகள் இருக்க வேண்டியது கட்டாயத் தேவை. பெரும் பொருட் செலவும் செய்து விட்டு வழக்கு முறைகளில் நிலைபெற்றிருக்கும் முறையற்ற செயல்களைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையிலிருந்து வெளிவந்தே ஆக வேண்டிய அவசியமும் தேவையும் ஒரு சாமானியனுக்கு இருக்கிறது.



சமீபத்தில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி நீதித்துறையைக் காப்பாற்றும் படி ஒரு உணர்ச்சி கரமான வேண்டுதலைப் பிரதமர் முன்னிலையில் வைத்திருந்தார். பிரதமரும் அதற்கு இணக்கமான ஒரு பதிலையும், அந்த வேண்டுகோளைப் பரிவுடன் பரிசீலிப்பதாகவும் பதிலிறுத்திருக்கிறார். இந்த நிலையில் பொது சனமும்  அவர்கள் நோக்கில் வழக்காடும் அமைப்பிலிலிருந்து judicial establishment எதிர்பார்க்கும் குறைந்த பட்ச வழக்காடும் மற்றும் நிவாரண முறைகளைப் பற்றியும் ஒரு உரத்த சிந்தனையை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...